செய்திகள் :

``மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சியை சார்ந்த மாபியா'' - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

post image

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என நூறு நாட்களுக்கு மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தார். அதுசம்பந்தமாக இன்று (நவ.28) சென்னை எழும்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

அன்புமணி ராமதாஸ் அவர் பேசியதாவது,

"நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். தமிழகத்தின் பல பிரச்னைகளை வெளிச்சம் காட்டி அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து போராட்டங்களை செய்து இந்த பிரச்னைகளுக்கு தீர்வையும் கொண்டு வருவோம்.

திமுக அரசை அகற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் நடைபயணத்தை தொடங்கினேன். இவர்கள் தமிழகத்தை ஆள தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழ விவசாயிகளை சந்தித்தேன். அவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மாம்பழம் 1 டன்னே 8000 ரூபாய்க்குதான் போகிறது. பறிக்கிற கூலியை கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சி சார்ந்த ஒரு மாபியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாம்பழத்துக்கு 1 டன்னுக்கு 25000 ரூபாயை குறைந்தபட்ச ஊக்கத்தொகையாக கொடுக்க வேண்டும்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ்
செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ்

உலகத்திலேயே போராடுகிற விவசாயிகளை குண்டத் சட்டத்தில் அடைத்த ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். இப்படி ஒரு ஆட்சி தேவைதானா?

நந்தன் கால்வாய் இணைப்புத் திட்டத்தை 60 வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள். 300 கோடி ரூபாய் இருந்தால் அந்தத் திட்டத்தை செயல்படுத்திவிட முடியும். அன்புமணிக்கு 3 வயது இருக்கும் போது அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினோம் என அமைச்சர் எ.வ.வேலு பெருமையாக கூறுகிறார். அந்த 60 வருட திட்டத்தை செயல்படுத்த கூட திறமையில்லாத அரசுதான் திமுக அரசு.

வீராணம் ஏரியை தூர்வாரும் பணியை எந்த அரசும் இதுவரை செய்யவில்லை.

கொள்ளிடம் ஆற்றுக்கரையில் இருக்கக்கூடிய விவசாயிகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்கிறார்கள். எவ்வளவு மோசமான ஆட்சி இது? குடிநீர் வசதியை கூட உங்களால் செய்து கொடுக்க முடியாதா?

செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ்
செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ்

நெல் அறுவடையில் மூன்றில் ஒரு பங்கைதான் அரசு கொள்முதல் செய்கிறது. மற்றவற்றை தனியார்தான் கொள்முதல் செய்கிறது. அரசு செய்கிற அந்த ஒரு பங்கு கொள்முதலுக்கு கூட கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்கவில்லை. முதல்வரே நீங்களும் டெல்டாவிலிருந்துதானே வருகிறீர்கள்?" என்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ரகுபதி பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.அதனைத்தொடர்ந்து எடப... மேலும் பார்க்க

தேர்வு அறையில் செல்போன்; விடைத்தாளை `ஸ்டேட்டஸ்’ வைத்த மாணவர்! - புதுச்சேரி பல்கலைக்கழக அவலம்

காரைக்கால், மாஹே, அந்தமான்–நிக்கோபார், லக்‌ஷதீப் என நான்கு கிளைகளுடன் புதுச்சேரி கலாபட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகி... மேலும் பார்க்க

”SIR கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறப் போவதில்லை” - சொல்கிறார் துரை வைகோ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.கவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, “த.வெ.கவில் இணைய செங்கோட்டையன் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை. அவர் இணைவதால்... மேலும் பார்க்க

பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

கொங்கு மண்டலம்2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. செங்கோட்டையன் தவெக வருகைக்கு பிறகு கொங்கு மண்டல அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுக வலுவ... மேலும் பார்க்க

தவெக: "இதற்கு பதில் கூறினால் பிரச்னைகள் வரும்!" - செங்கோட்டையன்

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அம... மேலும் பார்க்க