செய்திகள் :

மின்னஞ்சல் காலத்திலும் மங்காத கையெழுத்துக் கடிதங்கள்; டிரெண்டாகும் 'ஸ்நெயில் மெயில்' - பின்னணி என்ன?

post image

"Typing..." என்ற மூன்று புள்ளிகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, தபால்காரரின் மணி சத்தத்தைக் கேட்டு கடிதத்துக்காகக் காத்திருக்கும் அனுபவம் மீண்டும் பலருக்குப் பிடித்திருக்கிறது. டிஜிட்டல் உலகின் வேகத்துக்கு நடுவே, மெதுவாகப் பயணிக்கும் 'ஸ்நெயில் மெயில்' ஏன் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது?

ஒரு காலத்தில் தொலைதூர உறவுகளையும் நட்புகளையும் இணைத்த பாலமாக இருந்தது கையெழுத்துக் கடிதங்கள். செல்போன், மின்னஞ்சல், வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் ஆகியவை வந்த பிறகு, தபால் பெட்டியைத் திறக்கும் பழக்கம் படிப்படியாக மறைந்துவிட்டது. ஆனால், தற்போது அந்த பழக்கம் மீண்டும் உயிர்பெற்று வருகிறது.

'ஸ்நெயில் மெயில்' (Snail Mail) என்பது தபால் துறை மூலம் அனுப்பப்படும் கையெழுத்துக் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், புகைப்படங்கள், சிறிய நினைவுப் பரிசுகள் ஆகியவற்றின் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. வேகமாகச் செல்லும் இணைய உலகுடன் ஒப்பிடும்போது இது மெதுவாகப் பயணிப்பதால், இதற்கு 'Snail Mail' என்ற பெயர் வந்தது.

காலை எழுந்ததும் மொபைல்... இரவு தூங்கப் போறதுக்கு முன்னாடியும் மொபைல்... இதுதான் இப்போ பலருடைய வாழ்க்கை. ஒரு மெசேஜ் அனுப்பின சில நொடிகளில் ரிப்ளை வந்துடும். ஆனா, அதே நேரத்துல ஒரு கடிதத்துக்காக சில நாட்கள் காத்திருக்கிற அந்த சந்தோஷம் வேற லெவல்.

தொடர்ந்து மொபைல் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையிலிருந்து சிறிது நேரம் விலகி, மெதுவாக வாழ்வதை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இந்தப் போக்குக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சில நிமிடங்களில் மறைந்து போகும் டிஜிட்டல் செய்திகளுக்கு மாறாக, கையெழுத்துக் கடிதங்கள் பல ஆண்டுகள் நினைவுகளாக பாதுகாக்கப்படுகின்றன.

AI

குறிப்பா Gen Z இளைஞர்களே இந்த டிரெண்டை மீண்டும் கொண்டுவந்திருக்காங்க. வண்ணமயமான காகிதங்கள், ஸ்டிக்கர்கள், சிறிய ஓவியங்கள், பூ இதழ்கள், புகைப்படங்கள் என அலங்கரிச்சு கடிதம் அனுப்புறது இப்போ ஒரு ஹாபியாகவே மாறியிருக்கு.

எல்லாமே உடனுக்குடன் கிடைக்கிற காலத்துல, கொஞ்சம் பொறுமையா காத்திருந்து ஒரு கடிதத்தை வாங்குற அந்த உணர்வு... அது எந்த நோட்டிபிகேஷனாலும் கொடுக்க முடியாத மகிழ்ச்சி. அதனால்தான், மின்னஞ்சல் வேகமா ஓடுற இந்தக் காலத்துல கூட, மெதுவா பயணிக்கும் 'ஸ்நெயில் மெயில்' இன்னைக்கும் பலருடைய மனசுல தனி இடத்தைப் பிடிச்சிருக்கு.

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க