செய்திகள் :

"முதலாளிகளே லஞ்சம் தருகின்றனர்; நடவடிக்கை எடுப்பீர்களா?" - அமைச்சர் கீர்த்தனாவிடம் CPIM கேள்வி

post image

லஞ்சம் வாங்குவது குறித்து நேற்று இரவு (செப்டம்பர் 4) அமைச்சர் கீர்த்தனா, "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.

இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும்.

லஞ்சம் குறித்து தெரிந்தால் Whats App Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என்று பதிவிட்டிருந்தார்.

CPIM பேச்சு
CPIM பேச்சு

இந்தப் பதிவிற்கு பதில் தரும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், "மாற்றம் வரும் வரை நடவடிக்கை உறுதி: அமைச்சர் கீர்த்தனா.

தொழில்துறை அமைச்சர் அவர்களே தொழில் லைசன்ஸ் பெற தொழிலாளர்களோ பொதுமக்களோ லஞ்சம் தருவதில்லை.

முதலாளிகளே தருகின்றனர் லஞ்சம் கொடுப்பவர் குற்றம் புரிந்தவர் என்கிற முறையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

இதுவரை தவறு செய்த பெருமுதலாளிகள் நம் நாட்டில் தண்டிக்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? - வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலைய... மேலும் பார்க்க

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" - தவிக்கும் கோவை கிராம மக்கள்

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள்... மேலும் பார்க்க

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' - ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை ... மேலும் பார்க்க

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" - கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்... மேலும் பார்க்க

"டாஸ்மாக் பிரச்னை 200 படிகள் கொண்டது; நான் 70 படிகள் ஏறிவிட்டேன்" - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

கோவை பேரூர் அருகே த.வெ.க மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து... மேலும் பார்க்க

"அதிமுகவும் திமுகவும் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது" - அமைச்சர் நிர்மல்குமார்

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க