செய்திகள் :

மது அருந்திய வடமாநிலத்தவரை விசாரித்த போலீஸ்; பதிலுக்குத் தாக்கினார்களா இளைஞர்கள்? என்ன நடந்தது?

post image

கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் கணேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமி மேற்பார்வையில் அரசு மதுபானக் கடை அருகே ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மூன்று இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட காவலர் கணேசன், அங்கு மது அருந்தியது குறித்து அவர்களிடம் விசாரித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து காவலர் கணசேன் சட்டையைப் பிடித்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த காவலர் கணேசன் அளித்த தகவலின் பேரில், தென்னிலை மற்றும் க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் காவலர் கணேசனை கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

மேலும், இரவு ரோந்து பணியில் இருந்த காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 3 வடமாநில இளைஞர்களையும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தென்னிலை காவல் ஆய்வாளர் சுகன்யா தலைமையிலான போலீஸார் தென்னிலை அருகாமையில் உள்ள நிறுவனங்களில் திடீர் தேடுதல் மேற்கொண்டனர.

police

அப்போது, விசாரணையில் குடக்கில் நாயக் (வயது: 27) , சகாதேவ் பாரீக்(வயது: 26), ரவிந்தீர கட்டய்யா (வயது: 22) ஆகிய மூன்று வட மாநில இளைஞர்களை, தென்னிலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில் மது போதையில் காவலரைத் தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியரை மது போதையில் தாக்கியது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் இரவு 10 மணிக்குமேல் மதியம் 12 மணி வரை கள்ள சந்தையில் மது விற்பனை நடப்பதால், பொது இடங்களில் மது அருந்தும் மது பிரியர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

”மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை விற்பனை”- 6,000 மாத்திரைகள் பறிமுதல்; ரெளடி உட்பட 4 பேர் கைது

தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதன... மேலும் பார்க்க

திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர்

தி.மு.க முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கடந்த தி.மு.க ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையைக் கவனித்து வந்தார். அந்தத் துறையில் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்றதாக அவர் மீது அமலாக்கத்து... மேலும் பார்க்க

நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை. அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு பெண்ணுக்கு நிர்வாண பரிகார பூஜை - சென்னை ஜோதிடர் சிக்கிய பின்னணி!

கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண், சென்னையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர், சென்னைக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் ... மேலும் பார்க்க

ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு - கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வ... மேலும் பார்க்க

திருச்சி: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய தலைமை ஆசிரியர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த உயர் நிலைப் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வர... மேலும் பார்க்க