செய்திகள் :

“முதல்வர் வாகனம் முன்னே... செய்தி துறை வாகனம் பின்னே!” - செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

post image

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு புகார் ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது. 

அ.தி.மு.க வின் எம்.பி-யும் அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை இன்று காலை  தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் “தமிழக அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறை ஆளும் கட்சியான தி.மு.க-வுக்கும்.   முதல்வருக்கும் ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்பதுரை

 முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் போது, TN 06 AU 2345 என்ற பதிவு எண்ணைக் கொண்ட “TN GOVT PRESS” ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் அவருடன் இணைந்து செல்கிறது. அந்த வாகனத்தில் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறையின் இணை இயக்குநர் பிரபு குமார், தற்காலிக வீடியோ கிராபர் திரு. முகில் , செய்தி துறை ஓட்டுநர் திரு. பிரபாகர் மற்றும் தமிழ்நாடு மின்விநியோகக் கழக ஊழியர் திரு. லோகேஷ் ஆகியோர் முதல்வருடன் மாவட்டங்களுக்கு பிரசாரங்களில்   பயணம் செய்கின்றனர்.

இந்த அதிகாரிகள் தி.மு.க கட்சி மற்றும்  முதல்வரும் தொடர்புடைய தேர்தல் பிரச்சார காட்சிகள் மற்றும் தகவல்களை சேகரித்து, அவற்றை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில்  பரப்ப உதவி செய்கின்றனர். இதற்காக அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறைக்கு சொந்தமான வீடியோ கேமரா, புகைப்பட கருவிகள் மற்றும் நேரலை ஒளிபரப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளிப்படையாக மீறுவது மட்டுமல்லாமல், அரசின் அதிகாரப்பூர்வ இயந்திரங்களை அரசியல் நலன்களுக்கு தவறாக பயன்படுத்துவதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

நேற்று காலை பா.ஜ.க தரப்பு பத்திரிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சென்னை மாநகர ஆணையாளர் அருண் நடவடிக்கைகள் இருக்கிறது. அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என புகார் அளித்தனர். அதை தொடர்ந்து நேற்று இரவே சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மாற்றப்பட்டார். இன்று அ.தி.மு.க செய்தி துறை அதிகாரிகளின் பெயரையே பட்டியலிட்டு, தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளது. இதனால், செய்தி துறை அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றும் நடவடிக்கையில் இறங்கலாம் என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

ஐசியூவில் சிகிச்சை பெறும் வானதி சீனிவாசன் - மருத்துவமனை விளக்கம் என்ன?

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நேற்று தேர்தல் பரப்புரையின் இடையே வானதி சீனிவாசனுக்கு திடீரென கா... மேலும் பார்க்க

கடுமையான காயங்கள்; காலை இழந்த மொஜ்தபா காமேனி? - வெளியான அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அலி காமேனி மறைவிற்கு பிறகு அவரது மகன... மேலும் பார்க்க

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க