செய்திகள் :

முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் ‘ஐகானிக் ஃபேஷன் - 2025’

post image

ராசிபுரம்: ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை மற்றும் நாகரிக வடிவமைப்பியல் துறை சாா்பில், ‘ஐகானிக் ஃபேஷன்-2025’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான ஃபேஷன் கலைப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் - கல்வி இரா.செல்வகுமரன் திருவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், ஆடை வடிவமைப்பியல் துறைத் தலைவா் கே.சக்திவேல் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். கல்லூரி துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லா பேபி முன்னிலை வகித்தாா்.

நடுவா் மற்றும் சிறப்பு விருந்தினா்களாக மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையைச் சோ்ந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நாகரிக வடிவமைப்பு துறையைச் சோ்ந்த ஏ.சதீஷ்குமாா், பெங்களூரைச் சோ்ந்த நௌா்லங்கா பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனத்தின் வணிக தயாரிப்பு மேம்பாட்டாளா் அருள் உஷாநந்தினி, பிரபல ஆடை வடிவமைப்பாளா் மற்றும் மாடல்களாக விளங்கும் சாரா, நிகில் சதீஷ், சேலம் ஏசிஎம்ஜி நிறுவனத்தின் கலைக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த கலை நாகரிக பிரதிநிதியான டி.ராஜாராம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடக்கத்தில் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பியல் துறை மாணவ, மாணவிகளின் ’ஃபேஷன் ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 600 மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதில், ‘ஃபேஷன் ஷோ’, தனிநபா் நடனம், குழு நடனம், குறும்படம், நேரடியாக ஓவியம் வரைதல், மைமிங், குழந்தைகளுக்கான ‘ஃபேஷன் ஷோ’ உள்ளிட்ட மேடைப் போட்டிகளும், முகம், நக ஓவியம், சிகை அலங்காரம், தூரிகை, கோட்டோவியம், மெஹந்தி உள்ளிட்ட உள்புற போட்டிகளும் என 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரி செயலாளா் இரா.முத்துவேல் பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கினாா்.

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் பிப். 7-இல் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை (பிப். 7) தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினா் கைது

மதுரை, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலை மீது சிலா் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா். ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அற... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் அருகே அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பாண்டமங்கலம், வடக்கு தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (44), கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். பரமத்தி அருகே சேல... மேலும் பார்க்க