செய்திகள் :

மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்

post image

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வுமான திருமுருகனுக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது.

அதனடிப்படையில் கலை அமுதனுக்கு அமைச்சர் திருமுருகன் ரூ.41.44 லட்சம் தர வேண்டியிருந்திருக்கிறது. அந்த தொகைக்காக கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் `செக்’கை கலை அமுதனிடம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். அதன்படி வங்கியில் செலுத்தப்பட்ட அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது.

நீதிமன்றம்
நீதிமன்றம் பிடிவாரண்ட்

அதுகுறித்து கலை அமுதன் தெரிவித்தபோது, ஜூன் 10-ம் தேதியிட்ட வேறொரு செக்கை கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன்பிறகு மூன்றாவது முறையாக ஜூன் 27-ம் தேதியிட்ட புதிய `செக்’கை கொடுத்திருக்கிறார் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வர, நவம்பர் மாதம் நீடாமங்கலம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் சென்றார் கலை அமுதன்.

அதையடுத்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமைச்சர் திருமுருகன். அதனால் அமைச்சர் திருமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி இந்துஜா. அதனால் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானதையடுத்து, வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி இந்துஜா.

"டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!' - மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர... மேலும் பார்க்க

அதிமுக: "கட்சியை சில அரசியல் புரோக்கர்கள் அழிக்கப் பார்க்கிறார்கள், ஆனால்.!"- சி.வி சண்முகம்

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அதிமுக எம்.பி சி.வி சண்முகம், " அதிமுக வரலாற்றிலேயே பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வ... மேலும் பார்க்க

அதிமுக: `நாம் வென்றபோது சட்டையை கிழித்துக்கொண்டு திரிந்தவர் ஸ்டாலின்' - பொதுக்குழுவில் எடப்பாடி

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

"அண்ணாமலை நீண்டகால நண்பர்; அவரை சந்தித்ததில் அரசியல் இல்லை" - டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக-வின் செயற்குழு, பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அம்மா மக... மேலும் பார்க்க