செய்திகள் :

மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக புதிய நடிகை!

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த நடிகை ஜோவிதா லிவிங்ஸ்டன் அத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி அத்தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் இந்திரா தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

தற்போது மெளனம் பேசியதே தொடரில் நடிக்கவுள்ளதால், ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் மெளனம் பேசியதே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடர், ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜகதாத்ரி தொடரின் மறு உருவாக்கம்.

இத்தொடரில் அசோக் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் நடித்துவந்தார். இவர்களுடன் ஐரா அகர்வாலும் முதன்மை பாத்திரத்தில் தோன்றுகிறார்.

இந்நிலையில், மெளனம் பேசியதே தொடரில் எனது கதாபாத்திரம் மிகுந்த சுயநலம் கொண்டதாகவும், மன அழுத்தம் உடையதாகவும் உள்ளதால் அத்தொடரில் இருந்து விலகுவதாக ஜோவிதா அறிவித்திருந்தார்.

மேலும், சில மாதங்களாக ஓய்வின்றி நடிப்பதைப்போன்று உள்ளதாலும் தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக இல்லாததால், இத்தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதாவுக்கு பதிலாக நடிகை ஃபெளசி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா தொடரில் நாயகியாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவராவார். தற்போது மெளனம் பேசியதே தொடரில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் நடிகைகளுக்கு குவியும் அடுத்தடுத்த வாய்ப்பு!

தை பூசம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்புப் பேருந்துகள்!

வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -இபிஎஸ்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கமளித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை ஒன்... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவால் ஒருவர் கொலை!

கோவையில் மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை வெட்டி படுகொலை செய்த கணவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்த... மேலும் பார்க்க

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந... மேலும் பார்க்க