செய்திகள் :

மேகதாது: ``போராடிப் பெற்ற தீர்ப்பைக்கூட இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை" - எடப்பாடி பழனிசாமி

post image

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றே தெரியவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய பிரதிநிதிகளை அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று அதிமுக சார்பிலும், பிற கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும் பலமுறை வலியுறுத்தப்பட்டது. மூத்த சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்று ஊடகங்கள் மூலமாகவும் அறிக்கைகள் மூலமாகவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இந்த அரசு அதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை.

அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கின்றது. முன்பு அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, காவிரி அல்லது மேகதாது பிரச்னை வரும்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண்பார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்னையில் போராடிப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக்கூட, இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. கர்நாடக அரசு அங்குள்ள அரசியல் கட்சிகளையும் விவசாயிகளையும் மதிக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. காவிரி விவகாரத்தின் வரலாறு தெரியாத ஒரு ஆட்சியாகவே இது செயல்படுகிறது." என்றார்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை; பட்டாசு வெடித்து வரவேற்ற பாஜக-வினர்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து ட... மேலும் பார்க்க

'விஜய்யின் ஆன்லைன் தளபதி; ஜெகதீஸின் பரிந்துரை!'- TN Fact Check Unit இன் தலைவராக்கப்பட்ட 'குரு' யார்?

தமிழக அரசின் 'உண்மை சரிபார்ப்புக் குழு'வின் பெயரை 'தகவல் நம்பகத்தன்மை சரிபார்ப்புக் குழு' எனப் பெயர் மாற்றி 'குரு' என்பவரை அதற்கு தலைவராக நியமித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யார் இந்த குரு?அம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உடனே தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!" – உச்ச நீதிமன்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிர... மேலும் பார்க்க

மின்வாரியம்: ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு அள... மேலும் பார்க்க

தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்; விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ““இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: `முன்னிலையில் பிரசாந்த் கிஷோர்' - கவனம் ஈர்க்கும் பீகார்!

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய ப... மேலும் பார்க்க