செய்திகள் :

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

post image

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மே-4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதனிடையே பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல்.20) மேற்கு வங்க மாநிலத்தில் ஜர்கிராம் நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோரம் இருக்கக்கூடிய கடைக்கு சென்று காரப்பொரி வாங்கி சாப்பிட்டார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்தச் செயலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மம்தா பானர்ஜி, "வாகனத்தில் இருந்து திடீரென இறங்கி பிரதமர் காரப்பொரி சாப்பிடும்போது எப்படி கேமராக்கள் தயாராக இருந்தன.

இந்த முழு நிகழ்வும் முன்னரே திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு திரைக்கதை. காரப்பொரி சாப்பிட்டது வெறும் நாடகம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தேர்தலுக்காக இதுபோன்ற நாடகங்களை பிரதமர் அரங்கேற்றுகிறார். பிரதமர் தனது பாக்கெட்டில் இருந்து சரியாக 10 ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்கிறார்.

அவர் பாக்கெட்டில் 10 ரூபாய் வைத்திருப்பதை யாராவது நம்ப முடியுமா?" என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

'ஸ்டாலின் தன் தந்தை கலைஞரை சாகும்வரை கவனித்துக்கொண்டார்; ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளை'- ராமதாஸ்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவர் மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி வருகின்றனர்.`உண்மையான பா.ம.க., நாங்கள்தான்' எனக் ... மேலும் பார்க்க

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ - வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங... மேலும் பார்க்க

`என்னைக் கொல்ல முயற்சி; செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும்தான்..!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர் `பகீர்'

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஆசி.தியாகராஜன் களத்தில் உள்ளார்.கரூர் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான இனா... மேலும் பார்க்க