செய்திகள் :

`யார் சார் இப்ப ரேடியோ கேக்குறாங்க?' - `வானொலி' புத்தகங்களை பரிந்துரைக்கும் தங்க.ஜெயசக்திவேல்

post image

49-வது சென்னை புத்தகக் காட்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாசகர்களின் இறுதிகட்ட புத்தக நுகர்வும், புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த புத்தகக் காட்சியில் வானொலித் துறையின் மீது கொண்ட மிகுந்த ஆர்வத்தால் வானொலி தொடர்பான படிப்பினை படித்து பிபிசி உலக சேவையில் பணியாற்றி வானொலி குறித்து இதுவரையில் 10 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு இருக்கும் சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் தங்க.ஜெயசக்திவேல் அவர்களை சந்தித்து உரையாடினோம்.

"வானொலியும் எழுத்துலகும்"

``வானொலிக்கும் எழுத்துக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது என்றே கூறலாம். உங்கள் மூளையின் கற்பனை குதிரையை தட்டி எழுப்புவது தான் எழுத்து. அதே போன்றுதான் வானொலியும். வானொலி ஒலிபரப்புகளான நாடகங்கள், திரைசார்ந்த நிகழ்வுகள் பற்றி கேட்கும் பொழுது அதைக் கேட்கும் படிப்பறிவற்ற பாமர மக்களையும் கற்பனை உலகிற்கு கொண்டு செல்லும்.

ஆனால் காட்சி ஊடகத்தில் நீங்கள் பார்க்கும் போது, இது போன்ற கற்பனை உலகத்திற்கு உங்களால் செல்ல முடியாது. கல்கி எழுதிய புத்தகத்தில் நீங்கள் வந்தியத்தேவனை படிக்கும் போது பலருக்கு வந்தியத்தேவன் கட்டுகோப்பான உடல் கொண்டவராக, ஒரு கற்பனை இருக்கும். அதையே திரைப்படத்தில் பார்க்கும்போது வந்தியத்தேவன் இவர் தானா.. குந்தவை இப்படித்தான் இருப்பாரா.. என்று எண்ண கற்பனைக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

ஆனால் எழுத்துக்கள் கற்பனை உலகிற்கு உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் சிறகு விரித்து அழைத்துச் செல்லும். எழுத்தைப் போலவே வானொலியின் பின்னணி இசையும் கதையாடலும் எழுத்து உலகின் உலகத்திற்கே உங்களை இட்டுச் செல்லும்.

எழுத்துலகிற்கும் வானொலிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறது. படிக்கிற வாசகர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எழுத்து. அதே போலத்தான் செவிகள் வழியே கேட்கின்ற செய்திகளை சுவைக்கும் மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது வானொலி தான்.

வானொலி சார்ந்த எனது தெரிவு செய்யப்பட்ட, பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்றால்,

முதல் புத்தகம் "உலக வானொலிகள்" பொது சேவை ஒலிபரப்புகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் அரசு சார்ந்த வானொலிகள் மட்டும் இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட வானொலிகள் குறித்தான செய்திகள் இதில் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று ஒருவர் அந்த வானொலிகளை தொடர்பு கொள்ள முயன்றால், அந்த புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வானொலியின் இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு பேச முடியும்.

இரண்டாவது புத்தகம் ஹாம் ரேடியோ என்ற தலைப்பிலான புத்தகம்."ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம்" ஹாம் ரேடியோ என்பது லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கு மற்றும் அவசரகால தொடர்புகளுக்காக பயன்படுத்தும் தனி நபர்களுக்கான இருவழி வானொலி தொடர்பு சேவை.

ஹாம் ரேடியோ பற்றி புதிதாக கேள்விப்படுபவர்களுக்கு ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இருப்பினும் தமிழில் அறிமுகம் கொடுக்கக்கூடிய முதல் புத்தகம் இது தான்.

மூன்றாவது "யார் சார் இப்ப ரேடியோ கேக்குறாங்க..?" என்கிற புத்தகம். இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், பல பேரிடம் ரேடியோ பற்றி பேசும்போது யார் சார் நீங்க..?இப்ப யார் ரேடியோ கேக்குறாங்க..? என்றுதான் முதல் கேள்வி வரும் என்ற அடிப்படையிலேயே இந்த தலைப்பிட்டு ஒரு புத்தகத்தை தொகுத்து இருக்கிறேன். சென்னையில் வசிக்கும் வானொலி கேட்கும் நேயர்களை சந்தித்து அவர்களுடனான நேர்காணல்களின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

நான்காவது "பன்முகப் பார்வையில் சீன வானொலி". இதில் 14 புத்தகங்களை ஒரு தொடராக வெளியிட திட்டமிட்டிருந்தோம். தற்போது ஐந்து புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

அதில் முதல் புத்தகம் "சீன வானொலி"

இரண்டாவது புத்தகம் "பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி",

மூன்றாவது "பன்முகப் பார்வையில் வேரிதாஸ் வானொலி",

நான்காவது "பன்முகப் பார்வையில் பிபிசி வானொலி",

கடைசியாக வந்தது "பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி", வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி தினத்தில் "பன்முகப் பார்வையில் வத்திகான் வானொலி" வர இருக்கிறது. மார்கோனியால் தொடங்கப்பட்ட வானொலி இது.

இதன் சிறப்பு, இன்றும் தமிழில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 14 புத்தகங்களும் தமிழ் ஒலிபரப்பில் சிற்றலையில் ஒலிபரப்பும், ஒலிபரப்பிய வானொலிகள் பற்றியது . அதனால் அதனை ஆவணப்படுத்துகிறோம்." என்றார்.

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க

அறிவுத் தூதுவர்களுக்கு ஒரு சல்யூட்! : உன்னதமான மனிதர்களை கெளரவிக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கல்லூரி மாணவரால் கண்டெடுக்கப்பட்ட பழைமைவாய்ந்த புதைப்பொருள்கள்!

திருநெல்வேலியில் உள்ள மானூரில் மன்னர் காலக் கல்வெட்டுகள் பலவும் கிடைக்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் அங்கு அடிக்கடி சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கு செழியநல்லூரில் 450 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க

டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு - மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது.புத்தகத்தின் பெயர்: என்கிரேட்ட... மேலும் பார்க்க

"நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேன்; இப்போது காலன் வந்தாலும் தயார்"- தெ.ஞானசுந்தரத்திற்கு அரசு மரியாதை

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் உடல் இன்று சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த முன... மேலும் பார்க்க

மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' - நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம் `வீரய... மேலும் பார்க்க