செய்திகள் :

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு செக்: இந்தியா, சீனாவிற்கு 100% வரி? - அமெரிக்காவின் புதிய மசோதா!

post image

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கும் புதிய மசோதா ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை கொண்டு வந்தது அமெரிக்காவின் இரு கட்சி ஆதரவு கொண்ட செனட் உறுப்பினர்கள் குழு ஆகும்.

இந்த மசோதா சமீபத்தில் மறைந்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் முன்னெடுத்த மசோதா ஆகும்.

எந்தெந்த நாடுகள்?

இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜன் ஆகிய நாடுகள் தான் அந்த ஐந்து நாடுகள்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தப் புதிய மசோதா மூலம் இந்த நாடுகளுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

முன்பு, இது 500 சதவிகித வரியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு விலக்கு...

ஆனால், இந்த மசோதாவின் கீழ், ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கும் 15 ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, அந்த ஐரோப்ப நாடுகள் ரஷ்யாவை சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன என்றும், அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

ஏன் இந்த நடவடிக்கை?

இந்த மசோதா வெறும் வரி விதிப்பு மசோதா மட்டுமல்ல. இது ரஷ்யாவின் எரிசக்தி, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, ரஷ்ய அதிபர் புதினுக்கு கொடுக்கும் வணிக நெருக்கடி.

ரஷ்யாவிடம் இருந்து ஏதேனும் பொருள் இறக்குமதி செய்யப்படுவது ரஷ்யாவின் போருக்கு உதவி செய்வதாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு கெடுபிடி விதிக்க தான் அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது.

இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரவேற்பும் மிகப்பெரியதாக இருக்கிறது.

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? - விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவி கொடுக்கப்படவிருக்கிறதாம். முதல்வர் விஜய்யே தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டு மதியழகனின் பெயரை டிக் அடித்திர... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயில் நில மோசடி; பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவ... மேலும் பார்க்க

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விடாமல் பிரச்னை நீடித்து வரும் நிலையில், க... மேலும் பார்க்க

காமராசரின் 124-வது பிறந்தநாள் விழா: முட்புதர் மண்டிக்கிடக்கும் மணிமுத்தாறு அணை நினைவுத்தூண்

மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டது, தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஆட்சி காலத்தில்தான். அவர் ஆட்சி செய... மேலும் பார்க்க

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொட... மேலும் பார்க்க