செய்திகள் :

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? - விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

post image

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவி கொடுக்கப்படவிருக்கிறதாம். முதல்வர் விஜய்யே தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டு மதியழகனின் பெயரை டிக் அடித்திருப்பதாக கூறுகின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

கரூர் மதி
கரூர் மதி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், 'கடந்த 2 ஆண்டுகளாக கட்சிக்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகள் எல்லாரையும் எதோ ஒருவிதத்தில் அங்கீகரித்து விட வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். அதனால்தான் தேர்தலில் போட்டியிடாமல் தீவிரமாக பிரசாரம் செய்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் பதவியே முதல்வரே கைப்பட வழங்கினார்.

அந்தவகையில், கரூர் மதியழகனுக்கும் முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவியை கொடுக்க முதல்வர் முடிவெடுத்திருக்கிறார். கரூர் சம்பவத்தின் போது காவல்துறை முதலில் கைது செய்தது கரூர் மத்திய மாவட்டச் செயலாளர் மதியழகனைத்தான். அப்போதே எங்களின் தலைவர் அவரை நினைத்து வருந்தி மனம் நொந்து போனார். சிறையிலிருந்து வந்த பிறகு மதியழகனை குடும்பத்தோடு நேரில் அழைத்து நன்றி கூறி தைரியம் சொன்னார்.

கரூர் மதி
கரூர் மதி

'அவருக்கு என்ன செய்யணும்னு நாமதான் பார்த்து செய்யணும்' என உடனிருந்தவர்களிடம் கூறி மதி மீது தனிப்பட்ட அக்கறையும் எடுத்துக் கொண்டார். தேர்தலில் சீட் கொடுத்த போதிலும் மதி தோல்வியடைந்தார். ஆயினும் மதிக்கு உரிய கௌரவத்தை கொடுக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருந்தார். அதனால்தான் முக்கியமான வாரியம் ஒன்றின் தலைவர் பதவிக்கு மதியின் பெயரை டிக் அடித்து வைத்திருக்கிறார். மேலும், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சிக்கு புதிதாக வந்திருப்பதால் மதியின் இடத்துக்கு ஆபத்து வருமோ என்று எழுந்த பேச்சுகளுக்கும் கூட இதன்மூலம் முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்' என்கின்றனர்.

'வாரிய பதவிகளுக்கு அத்தனை அதிகாரம் கிடையாது. அது ஒரு கௌரவம் மட்டுமே. அதை வாங்கிக் கொண்டு மதி திருப்தியடைந்தால் கரூரில் எம்.ஆர்.வியின் ஆதிக்கமே மேலோங்கும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

பழனி முருகன் கோயில் நில மோசடி; பத்திரப்பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடத்தின் ஆவ... மேலும் பார்க்க

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விடாமல் பிரச்னை நீடித்து வரும் நிலையில், க... மேலும் பார்க்க

காமராசரின் 124-வது பிறந்தநாள் விழா: முட்புதர் மண்டிக்கிடக்கும் மணிமுத்தாறு அணை நினைவுத்தூண்

மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டது, தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஆட்சி காலத்தில்தான். அவர் ஆட்சி செய... மேலும் பார்க்க

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொட... மேலும் பார்க்க

"மோடி சொன்ன ஒரு வார்த்தை; Ironman இலக்கை நோக்கி என்னைத் திருப்பியது!" - அண்ணாமலை

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.மாநி... மேலும் பார்க்க