செய்திகள் :

ராகுல் vs அமித் ஷா: 'மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா?' - நாடாளுமன்றத்தில் காரசாரம்

post image

நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி vs மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக் காரசார விவாதம் சென்றது.

ராகுல் காந்தி vs அமித் ஷா

வினாத்தாள் கசிவு சம்பந்தமாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதற்கு அமித் ஷாதான் காரணம் என்று ராகுல் காந்தி பேசினார். மேலும், நேற்று அமித் ஷா மக்களவைக்கு வராதது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு உடனே பாஜக அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக குரல்கள் எழ, அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

இந்த விவாதத்தால் மக்களவைக்குள் அமளி ஏற்பட, சிறிது நேரம் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

அமித் ஷா குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அவருடைய பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பாஜக தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டது.

மன்னிப்பு?!

அமித் ஷா மீதான குற்றச்சாட்டிற்கு, "துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை ஒரு நீதிபதியோ அல்லது கோட்டாட்சியரோ மட்டுமே பிறப்பிக்க முடியும். ஒரு அமைச்சரால் அந்த உத்தரவைக் கொடுக்க முடியாது" என்று பாஜக விவாதம் செய்தது.

இருந்தும், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க தயாராக இல்லை.

பின் தொடங்கப்பட்ட அவையில் ராகுல் காந்திக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று மாலை ராகுல் காந்தி, அமித் ஷா மீதான குற்றச்சாட்டு குறித்து பேச செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அமித் ஷா
அமித் ஷா

அதில் ராகுல் காந்தி முன்வைத்த முக்கிய விஷயங்கள்...

"மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதற்குச் சாக்காக, 'நான் அமித் ஷா பற்றி ஏதோ பேசிவிட்டேன்' என்று சொல்கிறார்கள்.

நான் மன்னிப்புக் கேட்டால் தொடர்ந்து பேச அனுமதிக்கப்படுவேன் என்று கூறுகிறார்கள். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நபர்களிடம் நான் ஒருபோதும், எந்தச் சூழலிலும் மன்னிப்புக் கேட்க மாட்டேன்.

நான் புரிந்துகொண்ட வரை இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா. காவல்துறை அல்லது உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய படைகளால் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அவருடைய உத்தரவு தேவை.

நானே பார்த்தேன்...

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தபோது, அமித் ஷா காவல் அதிகாரிகளைத் தொலைபேசியில் அழைத்து பேசுவதை நானே பார்த்தேன்.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு அமித் ஷாவிடமிருந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்ததையும் பார்த்தேன்.

எனவே, வீதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

இப்போது இதில் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன. முதலாவது, 'மக்கள் மீது பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள், ஆணிகள் அடித்த தடிகளால் அடியுங்கள், எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் லத்திகளைப் பயன்படுத்துங்கள்' என்று அவரே உத்தரவிட்டிருக்க வேண்டும். அல்லது, இது நடப்பதே அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும்.

ராகுல் காந்தி, அமித் ஷா
ராகுல் காந்தி, அமித் ஷா

அமித் ஷா குற்றவாளி

இது நடப்பதே தெரியவில்லை என்றால் அவர் தகுதியற்றவர். ஒருவேளை அவர்தான் உத்தரவிட்டார் என்றால் அவர் குற்றவாளி. இதைத் தவிர மூன்றாவது சாத்தியக்கூறே இல்லை.

டெல்லி காவல்துறையும் சரி, விரைவு அதிரடிப் படையும் சரி இரண்டுமே அமித் ஷாவின் கீழ்தான் வருகின்றன.

எனவே, பிரதமருக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்... 'அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்குங்கள்'. உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக் குழுவின் கண்காணிப்பில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுங்கள்" என்று பேசியுள்ளார்.

``வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்தா உயர் நீதிமன்றம்

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் தீ... மேலும் பார்க்க

"நாங்கள் இருப்பதே வாடகை வீடு; என் குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி இல்லை..!"- அமைச்சர் ரமேஷ்

கடந்த ஜூலை 25ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை... மேலும் பார்க்க

திருச்சி: 'குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கக் கூடாது!' - கோரிக்கை முன்வைக்கும் சமூக ஆர்வலர்கள்

தமிழ்நாட்டில் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்க முன்மொழியப்பட்ட திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, எக்ஸ்னோரா, மக்கள் சக்தி இயக்கம், தண்ண... மேலும் பார்க்க

`முதல்வர் எங்களை கடிந்துகொண்டாலும் தவறில்லை.. அமைச்சர்களுக்கு அவர்தானே லீடர்!' - அமைச்சர் வன்னிஅரசு

நெல்லையில் ஆணவப் படுகொலைக்குப் பலியான கவினின் முதல் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு, 'ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்படும்' என உறுதிபட கூறியிருக்கிறார... மேலும் பார்க்க

பரமத்திவேலுார் அரசு மருத்துவமனை: ரூ. 6 கோடி மதிப்புள்ள கட்டடம் எப்போது திறக்கப்படும்?- மக்கள் கேள்வி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், பரமத்திவேலுார், பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பல்வ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - DVAC-ன் குற்றச்சாட்டு என்ன?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நேற்று (ஜூலை 29) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்... மேலும் பார்க்க