செய்திகள் :

ராணிப்பேட்டை: "என் தங்கமே, என்னை விட்டு போய்ட்டியே" - ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சோகம்

post image

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகேயுள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் 13 வயது மகன் பார்த்திபன், பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தான்.

திரு.வி.க நகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் 14 வயது மகன் நித்திஷ், சிப்காட் கிறிஸ்ட் தி கிங் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தான். அதேபோல, திரு.வி.க நகர் நான்காவது பொதுத் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மகன் பெயரும் நித்திஷ் (வயது 13). இந்த நித்திஷ் சிப்காட் சி.எஸ்.ஐ பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்துவந்தான்.

இந்த நிலையில், மூன்று சிறுவர்களும் இன்றைய தினம் மணியம்பட்டு ஏரியில் குளிப்பதற்காகச் சென்றிருக்கின்றனர். நீச்சல் தெரியாததால், மூன்றுபேரும் ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுவர்கள்
உயிரிழந்த சிறுவர்கள்

தகவலறிந்ததும், அப்பகுதி மக்களும், சிப்காட் போலீஸாரும் விரைந்து சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுவர்களின் உடலைப் பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும், `என் தங்கமே என்னை விட்டுட்டுப் போய்ட்டியே..’ என்று கதறி அழுதது, நெஞ்சை உலுக்கியது.

இந்தச் சம்பவத்தால், ராணிப்பேட்டை மாவட்டமே துயரில் மூழ்கியிருக்கிறது.

பெற்றோர்கள் கவனத்துக்கு...

குழந்தைகளையும், சிறுவர்களையும், நீச்சல் தெரியாத நபர்களையும் நீர்நிலைகள் பக்கம் அனுப்ப வேண்டாம். இப்போது, பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் தொடங்கியதால், பிள்ளைகள் பலரும் விளையாடச் செல்லும் இடங்களில் நீர்நிலைகளில் குளிக்க இறங்குகிறார்கள். எனவே, பிள்ளைகள் எங்குச் செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை பெற்றோர்கள் மிக கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற துயர்மிகு சம்பவங்கள் இனியும் நடைபெறாதவாறு எச்சரிக்கையுடன் இருப்போம்!

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தி.மு.க வழக்கறிஞர் கைது!

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரின் அம்மா, தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக வேலை செய்கிறார். 7-ம் வகுப்... மேலும் பார்க்க

`மாஜிஸ்திரேட் விசாரணைக்கே இடையூறு; ஏட்டு ரேவதியின் துணிச்சல்'- சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை- மகன் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த... மேலும் பார்க்க

ரிமோட் கன்ட்ரோல் பாம்பு, புலித்தோல், 150 முறை வெளிநாடு பயணம் - 58 பெண்களை ஜோதிடர் ஏமாற்றியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் கராட் என்ற ஜோதிடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன்னிடம் வரும் பெண்களிடம் உணர்வுபூர்வமாக, கணவர்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோ... மேலும் பார்க்க

நீதிபதியின் கையெழுத்துடன் பணி உத்தரவு: கர்நாடகா கோர்ட்டில் வேலை என கூறி ரூ.25 கோடியை ஏமாற்றிய தம்பதி

பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் - காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏபழனியாண்டிக்கு சொந்தமானது என்றும... மேலும் பார்க்க