செய்திகள் :

ரூ.66,000-ஐ நெருங்கிய தங்கம் விலை: புதிய உச்சத்தால் மக்கள் அதிர்ச்சி!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 14) சவரனுக்கு ரூ.880 அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் திங்கள்கிழமை ரூ.64,400-க்கும் செவ்வாய்க் கிழமை ரூ. 64,160-க்கும் விற்கப்பட்டது. புதன்கிழமை ரூ.360 உயர்ந்து ரூ.64,520-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ. 64,960 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இதையும் படிக்க:பட்ஜெட்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு!

புதிய உச்சம்

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.880 உயர்ந்து, ரூ. 65,840 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ. 8,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும் ஒரு கிலோ ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்! ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்!

மார்ச் 27, 28-ல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

மார்ச் 27, 28 தேதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இதனால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்ன... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று த... மேலும் பார்க்க

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிக... மேலும் பார்க்க

கடவுள் சரியாகத்தான் இருக்கிறார்; சில மனிதர்கள்தான் சரியில்லை: நீதிபதிகள்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் ... மேலும் பார்க்க