செய்திகள் :

வரி ஏய்ப்பு புகாா்: தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

post image

கோவை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக தங்கக் கட்டி விற்பனை நிறுவனத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

கோவை வைசியாள் வீதி, ராஜ வீதியில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளரான காா்த்திக், தென்னிந்திய தங்கக் கட்டி வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளாா்.

இந்நிறுவனத்தில், ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். சுமாா் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் அலுவலகம், வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கிருந்த கணினி, வங்கிக் கணக்கு புத்தகங்கள், தங்கக் கட்டி விற்பனை கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். சுமாா் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

தங்கக் கட்டி வியாபாரத்தில் ரூ.பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி நிவாரணம்! -அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். கோவை தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு முதல் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் வரை... மேலும் பார்க்க

ரூ.77 லட்சம் தங்கக் கட்டிகளுடன் தொழிலாளி மாயம்

ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை உப்பார வீதி, வன்னியா் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவா் சுகந்தா அஸாரா (32). இவரிடம் மேற்கு வங்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா ‘செஸ்’ பயிற்சி வகுப்பு!

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கட்டணமில்லா செஸ் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவி... மேலும் பார்க்க

ட்ரோன் அளவீடு மூலம் வரி விதிப்பதை நிறுத்த மதிமுகவினா் கோரிக்கை

கோவை மாநகரப் பகுதிகளில் ட்ரோன் அளவீடு மூலமாக வரி விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மதிமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக செயலாளா் கணபதி செல்வராசு தலைமையில், ம... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.20 கோடி மோசடி: 2 போ் கைது!

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத்தருவதாக ரூ.20 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஒ... மேலும் பார்க்க