செய்திகள் :

வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் மான்கள்; 'மான் பூங்கா' அமைக்க கோரிக்கை; கைவிரிக்கும் அதிகாரிகள்

post image

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள கல்லகம் பகுதியில் கலகம் ஏரி உள்ளது. திருச்சி- அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது.

இந்த ஏரியின் அருகில் காப்புக் காடுகள் உள்ளதால், அந்தக் காடுகளில் மான்கள் அதிக அளவு வசித்து வருகின்றன.

மான்
மான்

அந்த மான்கள் தண்ணீர் அருந்துவதற்காக சாலைகளைக் கடந்து இந்த ஏரிக்கு வரும்போது, வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சூழல் உள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் மான்களைப் பாதுகாக்க மான் பூங்கா அமைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேனியல்,

"இந்தப் பகுதியில் அதிகளவு மான்கள் வசிக்கின்றன. அவை இங்கு செல்லும் ரயில்களிலும், சாலைகளில் செல்லும் வாகனங்களிலும் அடிப்பட்டி இறக்கின்றன. இன்று அவை வசிக்கும் காப்புக் காடுகளில் தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இல்லை என்றால், தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வரும்போது வாகனங்களில் அவை அடிப்பட்டு இறப்பதைத் தடுக்கும்விதமாக இந்தப் பகுதியில் மான் பூங்கா அமைக்க வனத்துறைக்குக் கோரிக்கை வைத்தேன். ஆனால், வனத்துறை சார்பில், 'காப்புக் காடுகளிலிருந்து தண்ணீர் அருந்துவதற்காக வந்து செல்லும்போது சில நேரங்களில் வாகனங்களில் அடிப்பட்டு மான்கள் இறக்க நேரிடுகிறது.

deniyal

ஆனால், மான்கள் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க வாகன தணிக்கையின்போது, 'மெதுவாக செல்லுங்கள்' என்று அவ்வப்போது ஓட்டுநர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

அதேபோல், கல்லகம் ஏரியில் மான் பூங்கா அமைப்பதற்கான ஏற்ற சூழ்நிலைக்கான இடம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என்று சொல்லி இருக்காங்க. மான்களை எப்படித்தான் காப்பாற்றுவது? வாகனங்களில் அடிப்பட்டு மான்களைப் பாதுகாக்கு போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட். இவர், முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிரு... மேலும் பார்க்க

கரூர்: தாய், மகளுக்கு கத்திக் குத்து; பலியான தாய்... சிகிச்சையில் மக்கள்! - என்ன நடந்தது?

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் அருகே எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி பாப்பாம்மாள் (வயது: 65). இவர் மகள் மஞ்சுளா (வயது: 42). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொலைசெய்து உடலின் மீது சர்க்கரை தூவியது ஏன்? - சிக்கிய ஜோடியின் 'பகீர்' வாக்குமூலம்!

ஒரு கொலை... அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம்... ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்... மேலும் பார்க்க

சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் ... மேலும் பார்க்க

அரக்கோணம்: கார் ஷெட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள்; சிக்கிய இருவர்; பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கையாகவே மிக உயர்தரமான சந்தன மரங்கள் விளைகின்றன. இங்கிருந்து வெட்டப்படும் சந்தன மரங்களைச் சேகரிக்கவும், பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அரை ... மேலும் பார்க்க

`அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்' - மதுவில் விஷம்; கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. ஜிக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாக பிரித்வி அவரின் உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில... மேலும் பார்க்க