செய்திகள் :

"விஜய் எதிரியைச் சொல்லிவிட்டார்; கமலின் எதிரி யார்?" - கமல் சொன்ன பதில்!

post image

கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல்ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார்.

அதில் பல்வேறு கேள்விகள் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் கேட்கப்பட்டது. குறிப்பாக, 'ஒரு சீனியராக விஜய்க்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

கமல்

Kamal Haasan: "இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" - ஓய்வு குறித்து கமல் ஹாசன்

அதற்கு கமல், "நான் அறிவுரை கூறும் இடத்தில் இல்லை. சரியான நேரத்தில் எனக்கு அறிவுரை கிடைக்காததால் நான் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதேயில்லை. என் தம்பி விஜய்க்கு அறிவுரை கூற இது சரியான நேரமில்லை என்று நினைக்கிறேன்.

'யவருடைய அறிவுரையைவிடவும் அனுபவமே சிறந்த ஆசான்' என்பேன் நான். அனுபவம் சொல்லித்தரும் அனைத்தையும்.

கேள்வி: விஜய் தவெக என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் எதிரி (திமுக, பாஜக) யார் என்று அடையாளம் கண்டுவிட்டார். கமல் அரசியலில் தனது எதிரியை இன்னும் அடையாளம் காணவில்லையா?

கமல்: தனிப்பட்ட வகையில் யாரும் எனக்கு எதிரிகள் அல்ல. என்னுடைய எதிரி மிகப்பெரியது. இங்கு இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்க்க தைரியமில்லாமல் பயப்படும் எதிரிதான் என்னுடைய எதிரி. அது சாதிதான். சாதிதான் என்னுடைய எதிரி. அந்த சாதியம் என்னும் எதிரியைக் கொன்றுவிடுவதுதான் என்னுடைய லட்சியம்.

விகடன் சினிமா விருதுகள் மேடையில் விஜய்க்கு விருது வழங்கிய கமல்
கமல் - விஜய்

ஏன் கொன்றுவிடுவேன் என்று வன்முறையாகச் சூளுரைக்கிறேன் என்றால், சாதியம் அவ்வளவு வன்முறையானது, கொடுமையான வன்முறைகளை இன்னுமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அதைக் கொன்றுவிடவேண்டும் என்று லட்சியம் கொண்டுள்ளேன். அதுதான் என்னுடைய எதிரி, மிகப்பெரிய எதிரி" என்று பேசியிருக்கிறார் கமல்.

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க