செய்திகள் :

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

post image

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டில் பட்டுக்கோட்டை ஒதுக்கப்படவில்லை.

காங்கிரஸ் நிர்வாகி மகேந்திரனின் பதிவு

இந்நிலையில் துறையூருக்கு பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி, கவலை படாதே மகேந்திரன் என தொகுதி கிடைக்காததற்காக வாஞ்சையுடன் மகேந்திரனுக்கு ஆறுதலாக பேசியது பேசு பொருளானது. இந்தசூழலில் தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு தந்தது. இதனால் பல வருடங்களாக தொடர்ந்த திமுக, காங்கிரஸ் இடையோன கூட்டனி முடிவுக்கு வந்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் நேற்று ஆளுநரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து இன்று விஜய் முதல்வராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கிடையே 118 ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதம் கொடுத்தால் மட்டுமே முதல்வராக பொறுப்பேற்கலாம் என ஆளுநர் தரப்பில் சொல்லபட்டதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து விஜய்க்கு தொடுக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியும் ரத்தானது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வருவதால் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் தெறிக்கின்றன.

ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்
ஆளுநரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய்

இந்த சூழலில் பட்டுக்கோட்டை மகேந்திரனின் பதிவு அரசியல் மற்றும் காவல்துறை வட்டத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ஒரு விசில் போதும், கை கோர்க்க கோடி பேர் வருவார்கள். மெரீனா பீச் மணலில் மீண்டும் மக்கள் குரல் ஒலிக்கும். விசில் புரட்சி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது. அது போன்ற ஒரு போராட்டம் விஜய்க்கு ஆதரவாக நடக்கும் என்கிற ரீதியில் மகேந்திரன் பதிவு இருப்பதாக சொல்கிறார்கள்.

காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மூலம் இந்த பதிவை நீக்க சொன்னதாகவும், சத்தியமூர்த்தி பவனில் இருந்து நிர்வாகி ஒருவர் மகேந்திரனிடம் இதை சொல்ல அவர் நீக்க மறுத்து விட்டதாகவும் பேசப்படுகிறது.

இது குறித்து மகேந்திரனிடம் பேசினோம், ``ஆளுநர் செயல்பாட்டின் பின்னணியில் பாஜக-வின் அழுத்தம் இருக்கிறது. ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டும். அப்படி நடக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் ரோட்டுக்கு வந்து சட்டத்தை நிலைநாட்ட கூடிய சூழல் உண்டாகும்" என்றார்.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க