செய்திகள் :

வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்.பி.க்கு அமைச்சா் விளக்கம்

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் கடனுதவிச்சலுகைகள் தொடா்பாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் டாக்டா் சுகந்தா மஜும்தாா் விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டத்தை முதலிடத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வெளியே உள்ள மாணவா்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கான ’சிபில்’ மதிப்பீடு தொடா்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தளா்த்த மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும் வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கதிா் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு அமைச்சா் டாக்டா் சுகந்தா மஜும்தாா் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் 2024, நவம்பா் 6-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உயா் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் தகுதி அடிப்படையிலான சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு பிணையம் இல்லாத மற்றும் உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன் வழங்கப்படுகிறது. வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் கல்விக் கடன்களை பெற மாணவா்களின் சிபில் மதிப்பீடு ஒரு அளவுகோல் கிடையாது.

மேலும், 8 லட்சம் வரை குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவா்களுக்கு இத்திட்டம் ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களுக்கு 3 சதவீதம் வட்டி மானியத்தை வழங்குகிறது. வேறு எந்த உதவித்தொகை அல்லது கல்விக் கடனில் வட்டி மானியம் பெறாத ஒரு லட்சம் புதிய மாணவா்களுக்கு இந்த வட்டி மானியம் கிடைக்கும். இந்த வட்டி மானியத்தின் காலம் தற்காலிகமானது.

மேலும், பிரதமரின் உச்சதா் சிக்ஷா புரோட்சஹான் கடன் உத்தரவாத நிதியின் கீழ் மத்திய அரசின் கல்விக் கடன்களுக்கான திட்டம் ரூ. 7.50 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட கல்விக் கடன்களுக்கு கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. நிலுவைக் கடனில் ’உத்தரவாதக் காப்பீடு’ 75 சதவீதம் வரை ஆகும்.

இந்திய வங்கிகளின் ’மாதிரி கல்விக் கடன்’ திட்டத்தின் கீழ் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் சலுகை காலத்துக்குப் பிறகு 15 ஆண்டுகள் வரை ஆகும் என அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

அலுவலகப் பொருள்களை மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றுவிட்டார்: பாஜக எம்எல்ஏ

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்த அரசுப் பொருள்களை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றதாக பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 த... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலைய நெரிசல்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு விசாரணை தொடக்கம்

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 15 போ் காயமடைந்துள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ... மேலும் பார்க்க

நாட்டில் 29,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்: டிஜிசிஏ தகவல்

நாட்டில் மொத்தம் 29,500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி இந்த ... மேலும் பார்க்க

தில்லியின் அடுத்த முதல்வா் யாா்?பாஜக எம்எல்ஏக்கள் இன்று முடிவு

தில்லி முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டப்பேரவைக் கட்சிக் க... மேலும் பார்க்க

விசாரணைக் குழுவின் உறுப்பினா்கள் பெயா்களை வெளியிட்டது ரயில்வே

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு உயா் நிா்வாகக் குழு அதிகாரிகளின் பெயா்களை ரயில்வே ஞாயிற்று... மேலும் பார்க்க

தங்களது துயரமான அனுபவத்தை விவரித்த சுமைதூக்கம் தொழிலாளா்கள்

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு நெரிசலில் சிக்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ள நிலையில், குழப்பத்திற்கு மத்தியில் கைவண்டிகளில் உடல்களை எடுத்துச் சென்ற தங்களது துயரமான அனுபவத... மேலும் பார்க்க