செய்திகள் :

விருதுநகர்: சிறுமி மீது கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சியா? தட்டிக்கேட்ட தந்தைக்குக் கொலை மிரட்டல்

post image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில் வரி செலுத்துவது தொடர்பாக நெடுங்காலமாக முன்பகை இருந்து வருகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் 15 வயது மகளான சிறுமி தாரணி ஆடு மேய்த்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகத்தில் வந்த கார் சிறுமியின் மீது மோத முயன்றபோது சிறுமி விலகியதால் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த வயல்காட்டில் புகுந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கருணாநிதி காரில் வந்தவர்களைத் தட்டிகேட்டபோது காரிலிருந்து இறங்கிய இளைஞர்கள் ஆவேசத்துடன் கீழே கிடந்த கட்டைகளை எடுத்து தாக்க முயன்றதுடன் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்
கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்

முன்பகை காரணமாக குண்டுமலையின் மகன் ஆனந்தராஜ் (32) என்பவரின் தூண்டுதலின் பேரில் காரில் வந்த கும்பல் தனது மகளை காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டு தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுமியின் தந்தை கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி மீது கார் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பிச்சென்ற இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.

- சி.தா.வீரமணி

`எனக்கு தனியாக செய்ய துணிச்சல் இல்லை... நீயும் வா!'- புனே தொழிலதிபர் கொலையில் வெளியான `பகீர்' தகவல்

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி ஷியா கோயலுக்கு, ஏற்கெனவே அவரது காதலன் சேத்தன் சவுத்ரி என்ற நபருடன் ரகசியத் திருமணம் நடந்துள்ளது, போலீஸ் வ... மேலும் பார்க்க

"அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் காதலிக்கு ஐபோன்" - கைதான ஊழியர் வாக்குமூலம்

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் அப்பணத்தைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. இத்திருட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இது தொடர... மேலும் பார்க்க

சென்னை: தங்கக்காசு மோசடியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது - அடுத்து சிக்கப் போவது யார்?

சென்னையில் உள்ள தனியார் வங்கியில், ஊழியராகப் பணியாற்றிவரும் ராஜன் (பெயர் மாற்றம்) என்பவரிடம் கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பிரபுமணி, ‘4,500 ரூபாய... மேலும் பார்க்க

11 மாதக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்; கொன்றுவிட்டு நாடகமாடுகின்றனரா பெற்றோர்? பிண்ணனி என்ன?

பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாகனூர் கிராமத்தில் வசிக்கும் ஷேகப்பா தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அள... மேலும் பார்க்க

`அவள் எனக்கு மட்டும்தான்’ - வேறொருவரின் மனைவியுடன் தொடர்பிலிருந்த இருவர்; கொலையில் முடிந்த கொடூரம்

வேலூர் அருகேயுள்ள சதுப்பேரியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சிறுகாஞ்சியிலுள்ள விவசாய நிலப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் க... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் கட்டில்கள் திருடிய முன்னாள் மாணவன்; காவலரால் கையும் களவுமாகச் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரபலமான மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அங்கமாலி, சக்குவீடு பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன் (23) என்பவர் தாவரவியல் பிரிவில் படித்துவந்தார். கடந்த 2024-ம் ஆண்... மேலும் பார்க்க