செய்திகள் :

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய வேளாண் அமைச்சகம்

post image

விலை ஆதரவு திட்டத்தின்கீழ் (பிஎஸ்எஸ்) 2024-25 காரீஃப் பருவத்தில் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வேளாண் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விலை ஆதரவு திட்டத்தின்கீழ், 2024-25 காரீஃப் பருவத்தில் ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் இருந்து மொத்தம் 13.22 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் ஏற்கெனவே துவரம் பருப்பு கொள்முதல் தொடங்கியுள்ளது. மாா்ச் 11-ஆம் தேதி வரை, மொத்தம் 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் விரைவில் கொள்முதல் தொடங்கும்.

துவரம் பருப்பு மட்டுமன்றி, 9.4 லட்சம் டன் மசூா் பருப்பு, 1.35 லட்சம் டன் உளுத்தம் பருப்பு கொள்முதலுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விவசாய விளைபொருள்களின் சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறையும்போது, விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம், சந்தை விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்கிறது.

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்துவரும் போதிலும், தேவையை பூா்த்தி செய்ய இறக்குமதியை சாா்ந்திருக்க வேண்டிய நிலை தொடா்கிறது. எனவே, தன்னிறைவை எட்டும் நோக்கில் 2028-29-ஆம் ஆண்டு வரை பருப்பு வகைகளின் உற்பத்தியில் 100 சதவீத கொள்முதல் உறுதி செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சர்

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதீப் யாதவ் எழுப்பிய கேள்விக்கு வரு... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

கேரளத்தில் 2005 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை வழக்கில் சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் முழப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பிள... மேலும் பார்க்க

கேரள பாஜக தலைவரானார் ராஜீவ் சந்திரசேகர்!

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய பாஜக மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன் தனது ஐந்து ஆண்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் பேரவையில் சுயேச்சை எம்எல்ஏவைத் தாக்க முயற்சி! பேரவை துணைத் தலைவர் மீது தாக்குதல்!

அஸ்ஸாம் சட்டப்பேரவை துணைத் தலைவரை காங்கிரஸ் எம்எல்ஏ தாக்கியதை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை சுயேச்சை உறுப்பினரை பாஜக எம்எல்ஏ தாக்க முயற்சி செய்ததாக கு... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கல்: தில்லி உயர் நீதிமன்றம்

வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவு உடனட... மேலும் பார்க்க

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராகப் பதவியேற்றார் உமேஷ் குமார்!

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உமேஷ் குமார் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார். தில்லி மின்சாரத்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் தில்லி செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் உமே... மேலும் பார்க்க