செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மான்பாஞ்சாம்பட்டியில் திங்கள்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மான்பாஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் பாலசுந்தரம்(50). விவசாயி.

இவா், திங்கள்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு துவரங்குறிச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றுவிட்டாா். பிற்பகலில் வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த எட்டரை பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற துவரங்குறிச்சி போலீஸாா், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவானைக்கோயில் கோபுரப் பகுதியில் நெரிசலுக்கு தீா்வு காணக் கோரிக்கை

திருவானைக்கோயில் மேற்கு கோபுர குறுகிய நுழைவுவாயில் பகுதியில் காா்கள், ஆட்டோக்கள் சென்றுவருவதால் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீா்வு காண பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவானைக்கோயி... மேலும் பார்க்க

ஐடிஐ-யில் மாணவரை கம்பியால் குத்திய சக மாணவா் கைது

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரை இரும்புக் கம்பியால் குத்திய சக மாணவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லா (18). இவா், திர... மேலும் பார்க்க

லால்குடியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடியில் புதன்கிழமை (பிப். 5) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லால்குடி எல். அபிஷேகபுர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: காவல்துறை கண்காணிப்பில் இந்து அமைப்பு நிா்வாகிகள்

திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்புகளின் முக்கியப் பிரமுகா்களை காவல்துறையினா் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனா். திருப்பரங்குன்றம் கோயில் மலையில் வழிபாடு விவகாரம் தொடா்பாக பாஜக... மேலும் பார்க்க

அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் தமிழக முதல்வா் சி.என். அண்ணாதுரையின் 56 - ஆவது நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் அரசியல் கட்சியினா் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். திமுக : திமுக திரு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி கிராமம் சத்திரப்பட்டியை சே... மேலும் பார்க்க