செய்திகள் :

"நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

post image

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அதோடு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் தொடர்ந்து ஈரான் தாக்கி வருகிறது. இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள தீவிரவாத அமைப்புகளும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவர் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அவர் வெளியில் வரவே இல்லை. நேற்று நெதன்யாகு அளித்திருந்த பேட்டி ஒன்றின் காணொலி வெளியாகி இருந்தது. அந்தக் காணொலியில் நெதன்யாகுவிற்கு கையில் 6 விரல் இருப்பது போன்று இருந்தது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகு

இதனால் அந்த வீடியோ ஏ.ஐ. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், நெதன்யாகு போரில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பான செய்தி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது.

துருக்கியைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் இந்தச் செய்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலியின் பின்னணியில் உள்ள திரைச்சீலைகளின் நகர்வு உட்பட, இரண்டு இஸ்ரேலிய கொடிகள் பெரும்பாலும் அசையாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அந்தக் காணொலி செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளப் பயனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இச்செய்தியை இஸ்ரேல் வன்மையாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாக வரும் செய்திகள் போலியானவை. அதில் உண்மையில்லை. பிரதமர் நலமோடு இருக்கிறார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொலியில் 6 விரல்கள் இருப்பது குறித்து விசாரித்தபோது, அந்தக் காணொலியில் தெரிந்த கூடுதல் விரல் என்பது கேமரா கோணம் மற்றும் ஒளியின் நிழலால் ஏற்பட்ட ஒரு மாயை ஆகும்.

அது AI வீடியோ அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பெரிய அளவில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு எந்தவித அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்"- செல்வப்பெருந்தகை

இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆனால் இன்னும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை. குறிப்பாக திமுக கூட்டணியின... மேலும் பார்க்க

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்: "தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும்" - தேர்தல் ஆணையம்

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இ... மேலும் பார்க்க

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மே... மேலும் பார்க்க

"ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவோம்" - மதுரை ரஜினி காந்த் ரசிகர்கள் ஆவேசம்

சென்னையில்கடந்த வாரம் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மிகப்பெரிய அரசியல... மேலும் பார்க்க

`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி

தனது ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்னும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா.சக்கரவ... மேலும் பார்க்க

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" - எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து ஜாம்பவானும், நடிகரும், போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஐ.எம்.விஜயன் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் ... மேலும் பார்க்க