செய்திகள் :

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்: "தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும்" - தேர்தல் ஆணையம்

post image

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.

இது தொடர்பாக டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 4:00 மணியளவில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் முழுமையான கால அட்டவணையை வெளியிடுவார்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களிலும் 'தேர்தல் நடத்தை விதிகள்' (Model Code of Conduct) அமலுக்கு வரும்.

Gyanesh Kumar
Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

இதன் மூலம் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, அரசாணைகளை வெளியிடவோ முடியாது. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும்.

தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, பதற்றமான தொகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினரை நிறுத்துவது குறித்தும் இன்று அறிவிப்பு வெளியாகலாம். மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகளை அரசியல் கட்சிகள் இப்போதே இறுதி செய்யத் தொடங்கியுள்ளன. மாலை 4 மணிக்குப் பிறகு அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்"- செல்வப்பெருந்தகை

இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆனால் இன்னும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை. குறிப்பாக திமுக கூட்டணியின... மேலும் பார்க்க

"நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு மத்திய கிழக்கில் உ... மேலும் பார்க்க

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மே... மேலும் பார்க்க

"ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவோம்" - மதுரை ரஜினி காந்த் ரசிகர்கள் ஆவேசம்

சென்னையில்கடந்த வாரம் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மிகப்பெரிய அரசியல... மேலும் பார்க்க

`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி

தனது ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்னும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா.சக்கரவ... மேலும் பார்க்க

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" - எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து ஜாம்பவானும், நடிகரும், போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஐ.எம்.விஜயன் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் ... மேலும் பார்க்க