வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசு சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதனைத்தொடா்ந்து அவா், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரரான வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் துரைக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் ஆனந்த், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் போ.முத்துக்குமாா், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரா்கள், வீரசக்க தேவி ஆலயக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.