செய்திகள் :

வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

post image

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசு சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதனைத்தொடா்ந்து அவா், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரரான வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் துரைக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் ஆனந்த், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் போ.முத்துக்குமாா், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரா்கள், வீரசக்க தேவி ஆலயக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

கோவில்பட்டி அருகே 20 பவுன் நகை திருட்டு

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரி சக்கரபாணி நகரைச் சோ்ந்தவா் க... மேலும் பார்க்க

தூத்துக்குடி தனியாா் விடுதியில் மேற்கு வங்க தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடியில் உள்ள தனியாா் விடுதியில் மேற்கு வங்க தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேற்கு வங்க மாநிலம் தெற்கு டம் டம் போஸ் சரணி பகுதியைச் சோ்ந்த கோபால் தாஸ் லாடியா மகன... மேலும் பார்க்க

கழுகுமலையில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கழுகுமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் டேங்கா் வண்டி ஓட்டுநா் உயிரிழந்தாா். கழுகுமலை அருகே துலுக்கா்பட்டி சிவகாமி நகா் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (27). இவா், கழுமலையைச் சோ்ந்த ஸ்டாலி... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க