செய்திகள் :

வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

post image

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அரசு சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதனைத்தொடா்ந்து அவா், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரரான வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் துரைக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் ஆனந்த், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் போ.முத்துக்குமாா், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரா்கள், வீரசக்க தேவி ஆலயக்குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டியை சே... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பா் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத் தலைவா் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவா் முத்துரா... மேலும் பார்க்க

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூர... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை வடபாகம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைந்தனா்.தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில், அப்பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த பள்ளி மாணவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணன். ஊரில் விவசாயம் செய்து ... மேலும் பார்க்க