செய்திகள் :

சேலம்: `தொடர் தோல்வி எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - சுவரொட்டிகளால் பதறும் ஆதரவாளர்கள்

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையை நிரூபித்த த.வெ.க ஆட்சியை நடத்தி வருகிறது. இரண்டாம் இடம் பிடித்த தி.மு.க எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க - வில் பெரும் களேபரமே நடந்துக் கொண்டிருக்கிறது.

த.வெ.க ஆதரவு மற்றும் எதிர்ப்பு விவகாரத்தில் இரண்டாகப் பிளவுபட்டு வரும் அ.தி.மு.க - வில் பெரும் கலவரமே நடந்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி‌. வேலுமணி அணியா, எடப்பாடி பழனிசாமி அணியா எனும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிருப்தி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். `தேர்தலில் தொடர்ந்து நான்கு முறை தோல்வியைக் கண்ட பழனிசாமி உடனடியாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லா விட்டால் ' என எச்சரிக்கும் தொணியில் சேலம் மாவட்டத்தின்‌ பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சுந்தரம் கன்னங்குறிச்சி என்கிற பெயரில் ஒட்டுப்பட்டுள்ள இந்த போஸ்டர் விவகாரம் அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.!

“அ.தி.மு.க - தி.மு.க உறவை அம்பலப்படுத்தும் ப்ளான்.!” - த.வெ.க தலைமை வியூகம்!

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவும், தி.மு.க-வும் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அ.தி.மு.க- தி.மு. க கூட்டணி வைத்து ஆட்சியை ... மேலும் பார்க்க

`நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார். தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த பொதுமக்களுக்கு அவர் நன்றி சொல்ல... மேலும் பார்க்க

`60 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் முழுமையான அமைச்சரவை.!' - வி.டி.சதீசன் பெருமிதம்

கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேந்த வி.டி.சதீசன் இன்று (மே 18) காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார். வி.டி.சதீசன் தலைமையில் 21 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே ... மேலும் பார்க்க

`சி.பி.ஐ விசாரணை கோருவோம்; த.வெ.க செய்தது குதிரை பேரம் என்பதை நிரூபிப்போம்!" - டி.டி.வி.தினகரன்

திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,"மாற்றத்தை விரும்பிய மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து... மேலும் பார்க்க

`திமுகவில் பொன்முடி ஓரம் கட்டப்பட்டதற்கு காரணமே சி.வி.சண்முகம் தான்!’ - பின்னணியை உடைக்கும் அதிமுக

`சிகரெட் பற்ற வைத்து முகத்தில் புகையை ஊதுவார்..’விழுப்புரம் அ.தி.மு.க-வின் தெற்கு நகரச் செயலாளராக இருந்த பசுபதி, கடந்த மார்ச் மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதுடன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் ... மேலும் பார்க்க