செய்திகள் :

“அ.தி.மு.க - தி.மு.க உறவை அம்பலப்படுத்தும் ப்ளான்.!” - த.வெ.க தலைமை வியூகம்!

post image

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவும், தி.மு.க-வும் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அ.தி.மு.க- தி.மு. க கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்ட செய்தியை பெரிதுபடுத்த த.வெ.க திட்டமிட்டுள்ளது. 

வில்லிவாக்கத்தில் கடந்த 14-ம் தேதி நடந்த தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ தேர்தல் முடிவு வெளியான இரவே, எடப்பாடி மகன் மிதுன், முன்னாள் துணை முதல்வர் உதயநிதியை தொடர்பு கொண்டு பேசினார். இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து பேசப்பட்டது. இதற்கு ஒரு தொழிலதிபர் ஒருவரும் உதவி செய்தார்” என்று பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார்.

ஆதவ் அர்ஜுனா தவெக
ஆதவ் அர்ஜுனா தவெக

 ஏற்கனவே அ.தி.மு.க விலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்படும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணியினரும் இதே குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அ.தி.மு.க தலைமை மற்றும் தி.மு.க தலைமை இருவருமே, இந்த செய்தியை கடந்து போய்விடுகிறார்கள்.

மற்றொருபுறம், சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி “புஷ்பா பட பாணியிலான சோஃபா அரசு... இந்த அரசு மைனாரிட்டி அரசு” என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது சமூக வளைத்தளங்களில் பேசு பொருளானது. 

இந்நிலையில் தங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் தி.மு.கவுக்கு செக் வைக்கவும், அ.தி.மு.க தரப்பை அமைதிபடுத்தவும் த.வெ.க தலைமை திட்டம் வகுத்து வருகிறது. இதற்காக புதிய யுக்தியை அவர்கள் கையில் எடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து த.வெ.க-வுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசும் போது “த.வெ.க -வை தனிமைப்படுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.கவும், தி.மு.க வும்  பல திட்டங்களை வகுத்தன. அதெல்லாம் எங்களுக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது உண்மை.

ஆட்சிக்கு நாங்கள் வரக்கூடாது என பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க-வை தி.மு.க நாடியிருக்கிறது. ஆனால், எங்களை பி.ஜே.பி பி டீம் என தொடர்ந்து விமர்ச்சிக்கிறார்கள். இந்த யுக்தியை முதலில் காலி செய்ய உள்ளோம். 

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

ஆதவ் அர்ஜுனா இந்த யுக்தியை செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். விரைவில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் எந்த வகையில் கைகோர்த்து செயல்பட்டார்கள் என்பதை தொடர்ந்து நாங்கள் வெளியிடுவோம். இதற்காக யாரிடம் பேசினார்கள், மே-8ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட அனைத்தயும் நாங்கள் ஆதரங்களாக மக்கள் முன்னிலையில் வைக்க போகிறோம். 

இதுவரை அ.தி.மு.க -வுடன் கூட்டணி குறித்து தி.மு.க எந்த கருத்தும்  சொல்லவில்லை. அ.தி.மு.கவில் மட்டுமே, அது வெடித்துள்ளது. விரைவில் தி.மு.கவிலும் இந்த பஞ்சாயத்து கிளம்பும். இரண்டு  கட்சிகளும் தங்கள் தேவைக்கு எதைவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் நாங்கள் எடுத்து வைத்தாலே, இனி இவர்கள் இருவரும் ஆட்சியை பிடிக்கும் கனவை நினைத்து கூட பார்க்க முடியாது. இனி அடுத்தடுத்த நாட்களில் எங்களிடமிருந்து வரும் ஆக்ஷன்கள் இதை செயலாக்கும்” என்கிறார்கள்.

இதனிடையே தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை நடந்ததாகவும் தன்னை முதல்வராக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது. 

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களுக்கு... நடப்பு அரசியல் கண்டு அழும் வாக்காளனின் கடிதம்!

அன்பார்ந்த வேட்பாள பெருங்குடி மக்களே..'வழக்கத்தைத் தாண்டி இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா ஏமாந்துட்டோமோ'ங்கிற ஆதங்கத்துடன் உங்களுக்கு ஓட்டுப் போட்ட வாக்காளன் வரையும் மடல் இது. 'யோக்கியன் வர்றான் செம்பெடுத்... மேலும் பார்க்க

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' - என்னவாகும் போர் நிறுத்தம்?

சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது ஃபோக்கஸ் செய்ய தொடங்கியுள்ளார். ட்ரம்பின் சீன பயணம் ஈரான் போரில் முக்கிய திருப்புமுனையைக் கொண்டு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்... மேலும் பார்க்க

சேலம்: `தொடர் தோல்வி எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' - சுவரொட்டிகளால் பதறும் ஆதரவாளர்கள்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையை நிரூபித்த த.வெ.க ஆட்சியை நடத்தி வருகிறது. இரண்டாம் இடம் பிடித்த தி.மு.க எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க - வி... மேலும் பார்க்க

`நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார். தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த பொதுமக்களுக்கு அவர் நன்றி சொல்ல... மேலும் பார்க்க

`60 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் முழுமையான அமைச்சரவை.!' - வி.டி.சதீசன் பெருமிதம்

கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேந்த வி.டி.சதீசன் இன்று (மே 18) காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார். வி.டி.சதீசன் தலைமையில் 21 அமைச்சர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே ... மேலும் பார்க்க