செய்திகள் :

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

post image

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய கப்பலாக பார்க்கப்படும் `ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பல் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.

அந்த கப்பல் ஈரான் போர் தொடங்கிய பிறகு அப்போரில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 250 நாட்களுக்கும் மேலாக கரைக்கு திரும்பாமல் தொடர்ந்து ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் ஈரானின் தாக்குதலையும் இக்கப்பல் சந்தித்துள்ளது. இதனால் கப்பல் இருக்கும் கழிவறைகள் போன்ற உட்கட்டமைப்பு மோசமான நிலையில் இருக்கிறது. அதோடு அத்தியாவசிய பொருட்களான உணவு போன்ற பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பலில் இருக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களில் சிலர் கடலில் குதித்து தற்கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விரர்களின் உறவினர்கள் அமெரிக்க கடற்படையை கடுமையாக சாடி இருந்தனர். அமெரிக்க எதிர்க்கட்சிகளும் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தன.

இதனால் அக்கப்பலுக்கு மாற்றாக எஸ்.எஸ்.ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கிறது. அந்த கப்பல் வந்து ஏற்கனவே இருக்கும் எஸ்.எஸ்.ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுக்கு ஓய்வு கொடுத்து அதனை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும். ஜார்ஜ் வாஷிங்டன் தற்போது ஜப்பான் கடற்பகுதியில் முகாமிட்டு இருந்தது. அக்கப்பல் அங்கிருந்து ஏற்கனவே இருந்து புறப்பட்டுவிட்டது. பசிபிக் பகுதியில் செயல்பட்டு வந்த அக்கப்பல் இந்த வாரம் தான், பலத்த பாதுகாப்புடன் ஏவுகணை தடுப்பு சாதனங்களுடன் மலாக்கா ஜலசந்தி வழியாக மத்திய கிழக்கு பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி சுழற்சி முறையில்தான் ஜார்ஜ் வாஷிங்டன் மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

இச்செய்தி ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் இருக்கும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் சொந்தங்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்: சகோதரிகளிடம் சொத்தை அபரிக்க இறந்த தந்தை கைரேகையை எடுத்த மகன்

பெற்றோர் இறந்த பிறகு குடும்ப சொத்தை பிரித்துக்கொள்வதில் சகோதரன், சகோதரிகளிடையே தொடர்ந்து மோதல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சம பங்கு இருக்கிறது என்று அறிவித... மேலும் பார்க்க

சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழ்கிறது தென்காசி. இயற்கையும் ஆன்மிகமும் இணைந்த சுற்றுலாத் தலங்கள் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. குற்றாலம் அருவிகள், காசி விசு... மேலும் பார்க்க

கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்?

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது போர் நடக்கவில்லை என்றாலும... மேலும் பார்க்க

மும்பையில் உணவு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய டோமினோஸ் பிட்சா... சீல் வைத்த அதிகாரிகள்

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் துகாராம் முண்டே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாநிலம் முழுவதும் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். தற்போது மாநிலம் முழுவதும் உள... மேலும் பார்க்க

`ஈரான் தாக்கலாம்' - துருக்கியிலிருந்து உணவு லாரியில் பதுங்கி விமானநிலையம் சென்ற அதிபர் ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வந்தன. கடந்த மாதம் இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் ஈரான் மீது தாக்கியது. ஈரா... மேலும் பார்க்க

தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்... மேலும் பார்க்க