செய்திகள் :

வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் ஐபிஎல் அணிகள்..! ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

post image

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை ஐபிஎல் அணிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்றிரவு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் ஐபிஎல் நிர்வாகம் போட்டிகள் எங்கு நடத்த வேண்டுமென ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 16 போட்டிகளை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஐபிஎல் அணிகள் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்கள், பயிற்சியாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அநேகமாக ஐபிஎல் போட்டிகள் மே.15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. .

ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், நாதன் எல்லீஸ் மீண்டும் இந்தியா வருவதில் உறுதியாக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி தயாராகி வருகிறது.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃப்-க்கு தேர்வாகவில்லை. அதனால் அதில் இருக்கும் வீரர்கள் இந்தியாவுக்கு வருவதில் சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இந்தியாவுக்கு வரமுடியாத வெளிநாட்டு வீரர்களுக்காக தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் புதிய விதியை அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட... மேலும் பார்க்க

சிஎஸ்கே அணிக்கு திரும்பும் டெவால்டு பிரீவிஸ்..! ரசிகர்கள் உற்சாகம்!

இளம் சிஎஸ்கே வீரர் டெவால்டு பிரீவிஸ் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதாகக் கூறியுள்ளார்.தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க

ஜேக் பிரேசர் மெக்கர்க் விலகல்..! வங்கதேச வீரர் சேர்ப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கருக்குப் பதிலாக முஸ்தபிசூர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இருப்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட... மேலும் பார்க்க

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17 தொடங்கும்: பிசிசிஐ

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று(மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்க... மேலும் பார்க்க