செய்திகள் :

வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் ஐபிஎல் அணிகள்..! ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

post image

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை ஐபிஎல் அணிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நேற்றிரவு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் ஐபிஎல் நிர்வாகம் போட்டிகள் எங்கு நடத்த வேண்டுமென ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 16 போட்டிகளை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஐபிஎல் அணிகள் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்கள், பயிற்சியாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அநேகமாக ஐபிஎல் போட்டிகள் மே.15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. .

ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், நாதன் எல்லீஸ் மீண்டும் இந்தியா வருவதில் உறுதியாக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி தயாராகி வருகிறது.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃப்-க்கு தேர்வாகவில்லை. அதனால் அதில் இருக்கும் வீரர்கள் இந்தியாவுக்கு வருவதில் சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஷ்ரேயாஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ப... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள்... மேலும் பார்க்க

பெங்களூரு, ஹைதராபாத் அணி கேப்டன்களுக்கு அபராதம்!

மெதுவாகப் பந்துவீசியதாகக் கூறி பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.... மேலும் பார்க்க

இஷான் கிஷன் அதிரடி: ஆர்சிபிக்கு 232 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு; முதல் முறையாக அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?

பிளே ஆஃப் சுற்றுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுத... மேலும் பார்க்க