செய்திகள் :

வேலூர்: 15 வயது சிறுமி வன்கொடுமை; கடமைத் தவறிய போலீஸாருக்கு ரூ.9 லட்சம் அபராதம் - அதிர்ச்சி பின்னணி!

post image

வேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மோகனப்பிரியா என்பவரின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு சந்தோஷ்குமார் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. `இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது’ என வற்புறுத்தியதோடு, தொடர்ந்து தங்கள் வீட்டிலேயே தங்கச்சொல்லி மோகனப்பிரியாவும், மோகநாதன் என்பவரும் சிறுமியை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், `வி.ஐ.பி-க்கள் மற்றும் அரசு அதிகாரிகளைத் திருப்திப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கொன்றுவிடுவோம்’ எனவும் அச்சுறுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடவும் சிறுமியை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 23-6-2022 அன்று புகாரளித்தார். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் பிரிவு 3(a), 4(2), 17 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506(i) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களுக்கு ஆதரவாக போலீஸார் நடந்துக்கொண்டார்களாம்.

சிறுமி வன்கொடுமை

சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கை, அப்போதைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஷியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, எழுத்தர் தமயந்தி ஆகியோர் கையாண்டிருக்கின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி, `மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டாம்’ என்று சிறுமியிடம் கூறினாராம். அதுமட்டுமல்லாமல், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல் கிடைத்தும், குழந்தை நல அதிகாரிக்குத் தெரிவிக்கப்படவில்லை. போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகுதான் அந்தச் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​சிறுமியின் குடும்ப உறுப்பினரோ அல்லது குழந்தை நல அதிகாரியோ போலீஸாருடன் செல்லவில்லை, மாறாக, அந்தப் பணிக்காக ஒரு காவலர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, 25-8-2023 அன்று மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி என்பவரால் அவசர, அவசரமாக சிறுமி பாதிக்கப்பட்ட போக்சோ வழக்கு முடித்துவைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம் டிசம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில், ``வழக்கை கையாண்ட இன்ஸ்பெக்டர்கள் உட்பட முதல்நிலைக் காவலர்கள் வரையிலான 6 போலீஸாரும், தங்களின் கடமைகளை செய்யத் தவறியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமியிடமே மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் சிறுமிக்கு இழப்பீடு வழங்கக் கடமைப்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட சிறுமி எதிர்கொள்ளும் விவரிக்க முடியாத துன்பத்திற்கும், மன வேதனைக்கும் பண இழப்பீடு மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்பது, இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். ஆனால், சில நேரங்களில், அது ஒரு சரிசெய்யும் நடவடிக்கையாகவும், ஒரு குடிமகனின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அரசு ஊழியர்களால் மீறப்பட்டதற்கு பரிகாரம் தேடும் ஒரு தீர்வாகவும் இருக்கலாம்.

மாநில மனித உரிமைகள் ஆணையம்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் ஷாகின், ஷியாமளா, வாசுகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி ஆகியோரிடம் இருந்து தலா ரூ.2 லட்சமும், முதல்நிலை பெண் காவலர்களான தமயந்தி, ஜெயசுதா ஆகியோரிடம் இருந்து தலா ஐம்பதாயிரம் ரூபாயும் இழப்பீடாக வசூலித்து வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். மேலும், இவர்கள் 6 பேர் மீதும் `ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. சிறுமி பாதிக்கப்பட்ட `குற்ற எண் 20/2022’ வழக்கை, டி.எஸ்.பி பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரியைக் கொண்டு மறுவிசாரணை செய்து, 3 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆணையம் பரிந்துரைக்கிறது’’ என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க