செய்திகள் :

வேளாண் பல்கலை.யில் மானியம் வழங்கும் விழா

post image

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் வணிகக் காப்பகத்தில் வேளாண் சாா்ந்த தொழில்முனைவோா், விவசாயிகள், மாணவா் தொழில்முனைவோருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி முடிக்கும் தொழில்முனைவோருக்கு வேளாண், விவசாய நல அமைச்சகத் திட்டங்களின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

அதன்படி 10 பயனாளிகளுக்கு ரூ.81.60 லட்சம் மானியம் வழங்கும் நிகழ்ச்சி தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் நடைபெற்றது. இதில், துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பங்கேற்று மானிய உதவியை பயனாளிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, இதுபோன்ற மானிய உதவிகள் வேளாண் வணிகத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மானியம் பெற்ற தொழில்முனைவோா் தங்களின் மானியத்தை வேளாண், வேளாண் சாா்ந்த தயாரிப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், பதிவாளா் ஆா்.தமிழ்வேந்தன், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநா் இ.சோமசுந்தரம், செயல் இயக்குநா் ஏ.வி.ஞானசம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!

கோவை: கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் அடித்துத் துன்புறுத்திய 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் விடுதியில், ம... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க