செய்திகள் :

ஹார்முஸை முடக்கும் அமெரிக்க முடிவு: `எதிர்க்கும் உலக நாடுகள்' - மீண்டும் பின்னடைவில் ட்ரம்ப்!

post image

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா. இறுதியில் இது ஈரான் - அமெரிக்கா போர் எனப் பேசும் அளவு இரு நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதன் உச்சமாக உலக நாடுகளுக்கு எண்ணெய் கொண்டுச் செல்லப் பயன்படுத்தப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. அதை விடுவிக்கப்போவதாக அறைகூவல் வித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் ஆலோசனையின் பேரில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தார். ஈரானும் அதற்கு உடன்பட்டது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது கைகூடவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``ஹார்முஸ் ஜலசந்தியில் நுழையும் மற்றும் அதில் இருந்து வெளிவரும் கப்பல்களைத் தடுக்க அங்கே உடனடியாக அமெரிக்க கப்பற்படை நிறுத்தப்படுகிறது. அப்போதுதான் ஒருகட்டத்தில் அனைத்து கப்பல்களுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உள்ளே செல்லவும், வெளியே வரவும் முடியும். சட்டத்திற்குப் புறம்பாக, ஈரானுக்கு சுங்க வரி கட்டி ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களைத் தடுக்க அமெரிக்க கப்பற்படைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எங்கள் மீதோ, அமைதியாகப் பயணிக்கும் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால், அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் என ட்ரம்ப் எதிர்பார்த்த நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவத்துக்கு அளித்தப் பேட்டியில், ``அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஈரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேல் போருக்குள் ஐக்கிய இராச்சியம் இழுத்துச் செல்லப்படுவதை நான் விரும்பவில்லை. அமைதி காலத்தில் உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த மூலோபாய நீர்வழிப்பாதையை முழுமையாகத் திறப்பதே எங்களது நோக்கம்," என்று தெரிவித்தார்.

இம்மானுவேல் மக்ரோன் - கீர் ஸ்டார்மர்
இம்மானுவேல் மக்ரோன் - கீர் ஸ்டார்மர்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ``ஹர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை மீட்டெடுக்க பிரான்ஸும் பிரிட்டனும் இணைந்து ஒரு மாநாட்டை நடத்தும்" என்று அறிவித்துள்ளார். ஸ்பெயின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோப்லஸ், ``ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை எந்த அர்த்தமும் தராத ஒன்று. இது நிலைமையை மேலும் மோசமாக்கும்" என்று விமர்சித்துள்ளார். சீனா, ``சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பைப் பேணுவது உலக நலனுக்கு உகந்தது. அமெரிக்கா மீண்டும் போரை மூட்ட வேண்டாம்" என எச்சரித்துள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜலசந்தியை விரைவில் திறக்க வேண்டும் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் வலியுறுத்தியுள்ளார்.

``மத்தியில் மீண்டும் NDA ஆட்சி அமைந்ததும்... இது மோடியின் உத்தரவாதம்" - பிரதமர் மோடி பேசியது என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் "மேரா பூத் சப்சே மஸ்பூத்" (எனது வாக்குச்சாவடி மிக வலிமையானது) என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகப் ப... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் தாயார் மறைவு; அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற... மேலும் பார்க்க

அதிர வைத்த விஜய்; எச்சரித்த முதல்வர் தரப்பு - தூத்துக்குடி அஜிதா திமுக-வில் இணைந்த பின்னணி!

தூத்துக்குடி தவெக நிர்வாகியான அஜிதா நேற்று திடீரென திமுக-வில் இணைந்திருக்கிறார். இதன் பின்னால் லோக்கல் அமைச்சர் ஒருவரின் தீவிர காய் நகர்த்தலும் கனிமொழியின் விருப்பமும் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர் விவ... மேலும் பார்க்க

தவெக: ``தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடந்திருக்கிறது" - சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலுக்கான பிரசாரமும் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

அறிஞர் அண்ணா டு விஜயகாந்த் - தலைவர்கள் தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற தொகுதி எது தெரியுமா?

தமிழக அரசியலில் கோலோச்சிய முக்கிய தலைவர்கள் எந்த தொகுதியில் முதன் முதலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்று தெரியுமா? திமுக-வை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா, 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் த... மேலும் பார்க்க

`திமுக வெற்றிபெற உதவிய ஜெயலலிதா' - 1989 தேர்தல் களம் சொல்லும் அரசியல் | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல். ஆனால், அசைக்க முடியாத சக்தியாக இருந்த அந்த இயக்கம... மேலும் பார்க்க