குமரி: விபத்துகளால் பலியாகும் உயிர்கள்; நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள...
11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR
யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவை பற்றி தினம் தினம் செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
புனேவைச் சேர்ந்த டாக்டருக்கு 75 வயது. கடந்த ஜனவரி மாதம் அவருடைய செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. ''பங்குச் சந்தையில் நாங்கள் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்தால், 11 நாளில் பணம் இரட்டிப்பாகும்'' என்று அந்த எஸ்.எம்.எஸ் சொல்ல, 'அட, இது நல்ல லாபமா இருக்கே...?' என்று நினைத்து, எஸ்.எம்.எஸ்-ல் இருந்த நம்பருக்கு போன் செய்தார்.
எஸ்.எம்.எஸ் அனுப்பிய மோசடிக் கும்பல் இந்த டாக்டருக்கு போன் செய்து, அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார், எவ்வளவு பணத்தை லாபமாகப் பெற நினைக்கிறார் என்பதை எல்லாம் நைஸாகப் பேசி வாங்கியது. பிற்பாடு அவரை 'வி.ஐ.பி ஸ்டாக்ஸ் 24" என்று ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் சேரும்படி சொன்னது.

அதன்பிறகு அவருக்கு ஒரு டிரேடிங் பிளாட்பார்ம் இணையதளத்தை அனுப்பியது அந்த மோசடிக் கும்பல். இந்த இணையதளம் பார்ப்பதற்கு பக்காவாக வெளிநாட்டு இணையதளம் போல இருந்ததால், அதில் பணத்தைப்போட ஆரம்பித்தார் டாக்டர். கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையில் மோசடிக் கும்பல் தந்த 8 வேறு வேறு அக்கவுன்ட்டுகளில் 8 முறை ட்ரான்ஷாக்சன்களில் 12.31 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்தார் டாக்டர்.
ஒரு கட்டத்தில் இந்த மோசடி கும்பல் பற்றி டாக்டருக்கு சந்தேகம் வர, பணத்தைப் பரிமாற்றம் செய்ய மறுத்திருக்கிறார். ஆனால், மோசடி கும்பலோ, அவருடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்துவிடுவோம் என்றெல்லாம் மிரட்டி பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறது.
ஆனால், 11 நாளில் டபுளாகப் பணம் தருவோம் என்று சொன்ன மோசடி கும்பல், ஒரு மாத காலம் ஆனபின்பும் லாபத்தைக் கண்ணில் காட்டவில்லை. இன்னும் அதிகமான பணத்தைப் போடும்படி மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவே, மோசடி கும்பலிடம் வசமாக சிக்கிவிட்டதை உணர்ந்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க நினைப்பதற்குள், மோசடிக் கும்பல் போன இடம் தெரியவில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த 12 கோடி ரூபாயை அநியாயத்துக்கு இழந்துவிட்டோமே என்று இப்போது அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார் அந்த டாக்டர்.
உள்ளபடி பார்த்தால், பங்குச் சந்தையில் பணம் போட்டால், 11 நாளில் பணம் டபுள் ஆகும் என்று யாராவது சொன்னால் நம்பலாமா? நம்பவே கூடாது என்பது மட்டுமல்ல, அது மாதிரி பேசும் நபர்களிடம் இருந்து தூர விலகி நிற்க வேண்டும். பொதுவாக நம் பணமானது எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காகப் பெருகும் என்பதற்கு ஒரு ஃபார்முலா இருக்கிறது. 72 என்கிற எண்ணை நமக்குக் கிடைக்கும் லாப விகிதத்துடன் வகுத்தால், எத்தனை ஆண்டுகளில் நீங்கள் நீங்கள் முதலீடு செய்த டபுளாகும் என்பதை சொல்ல முடியும். உதாரணமாக, நீங்கள் வங்கி எப்.டி.-ல் 1 லட்சம் போட்டு வைத்திருக்கிறீர்கள். இதற்கு ஆண்டுதோறும் 7% வட்டி வருமானம் கிடைக்கிறது எனில், உங்கள் பணம் டபுள் ஆவதற்கு 10.3 வருடங்கள் ஆகும்.

ஸ்டெப் அப் முதலீட்டின் மூலம் செல்வத்தைப் பெருக்குவது எப்படி என்கிற ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் https://labham.money/events/webinar-apr12-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr12_2026 இந்த லிங்க்கை க்ளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்!
உங்கள் முதலீட்டுப் பணத்துக்கு ஆண்டுதோறும் எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பதுதான் சொல்வதுதான் CAGR என சுருக்கமாக சொல்லப்படும் Compounding Annual Growth Rate. நம் முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்தால், எத்தனை ஆண்டுகளில் அது டபுளாகும் என்பதை இனி பார்ப்போம்.
ஆண்டுதோறும் 2% லாபம் கிடைத்தால் - 36 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 3% லாபம் கிடைத்தால் - 24 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 4% லாபம் கிடைத்தால் - 18 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 5% லாபம் கிடைத்தால் - 14.4 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 6% லாபம் கிடைத்தால் - 12 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 7% லாபம் கிடைத்தால் - 10.3 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 8% லாபம் கிடைத்தால் - 9 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 9% லாபம் கிடைத்தால் - 8 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 10% லாபம் கிடைத்தால் - 7.2 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 11% லாபம் கிடைத்தால் - 6.5 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 13% லாபம் கிடைத்தால் - 5.7 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 14% லாபம் கிடைத்தால் - 5.3 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 15% லாபம் கிடைத்தால் - 5 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
ஆண்டுதோறும் 20% லாபம் கிடைத்தால் - 3.8 ஆண்டுகளில் பணம் டபுள் ஆகும்
இதுதான் நம் பணம் டபுள் ஆவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் கால அளவாகும். அதிகமான விகிதத்தில் நமக்கு லாபம் கிடைத்தால், குறைந்த காலத்தில் நம் பணம் டபுள் ஆகும். குறைந்த விகிதத்தில் வருமானம் கிடைத்தால், நம் பணம் டபுள் ஆவதற்கு அதிக காலம் பிடிக்கும்! இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், நாம் எந்த அளவு ரிஸ்க் எடுக்கலாம் என்பதை எளிதாக முடிவு செய்ய முடியும்!
ஆண்டுதோறும் 20% லாபம் தொடர்ச்சியாகக் கிடைப்பதே அரிது என்கிறபோது 11 நாளில் நம் பணம் இரண்டு மடங்காகப் பெருக வேண்டும் என்றால் அது எத்தனை ஆயிரம் சதவிகிதத்தில் வளர வேண்டும் என்பதை நீங்கள் கணக்கு போட்டுப் பாருங்கள்! ஒரே மாதத்தில் பணம் டபுளாகும், ஒரே ஆண்டில் பணம் டபுளாகும் என்று இனி யாராவது உங்களிடம் சொன்னால், `உடு ஜூட்' என்று காணாமல் போய்விடுங்கள்!
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா?
இது போன்ற சுவாரஸ்யமான/முக்கிய முதலீடு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள் - https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமா? இன்றே AMFI பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்'-ஐத் தொர்புகொள்ளுங்கள் - மிஸ்டு கால்: 9600296001
நீங்கள் விரும்பிய நேரத்தில் லாபம் ரிலேஷன்ஷிப் மேனேஜரிடம் பேச, கால் புக் செய்யவும் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்து பார்ப்பது அவசியம்.





















