"உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்" - நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி ...
11 மாதக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்; கொன்றுவிட்டு நாடகமாடுகின்றனரா பெற்றோர்? பிண்ணனி என்ன?
பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாகனூர் கிராமத்தில் வசிக்கும் ஷேகப்பா தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில், தனைவி விஜயலட்சுமி குழந்தைக்கு பால் புகட்டும்போது தூங்கியதால், குழந்தை 2 அடி உயர கட்டிலில் இருந்து விழுந்து காயமடைந்து இறந்துவிட்டதாகக் கூறி இருந்தார்.
கட்டிலில் இருந்து குழந்தை தவறி விழுந்தவுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை விரைவாகக் கொண்டு சென்றதாக ஷேகப்பா தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

போலீசார் முதலில் இதனைச் சந்தேகத்திற்குரிய மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெற்றோர் கூறியது அனைத்தும் பொய் எனத் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிகப்படியான உள் இரத்தப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததை உறுதி செய்தது. குழந்தையின் முகம், மார்பு, கால்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்தன.
மேலும் 2 அடி உயர கட்டிலில் இருந்து விழுந்தால் இவ்வளவு பெரிய உள் காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று மதிய உணவிற்கு ஷேகப்பா வீட்டிற்கு வந்தபோது கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் சண்டையிடும்போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய் விஜயலட்சுமி குழந்தையை உதைத்துள்ளார். தொடர்ந்து தந்தை ஷேகப்பா குழந்தையைத் தூக்கி தரையில் பலமாக வீசி எறிந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை ஷேகப்பா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொடூரக் குற்றத்தில் தாயின் முழுமையான பங்கு குறித்து பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான சண்டைகள் நடந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதோடு தந்தை ஷேகப்பாவின் மனைவி விஜயலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு அண்டை வீட்டுக்காரருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், அதன் காரணமாக கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விஜயலட்சுமிக்குத் தனது 11 மாதக் குழந்தை மீது எவ்வித பாசமும் இருக்கவில்லை என்றும், அவர் குழந்தையை மிகவும் அலட்சியமாகவே வளர்த்து வந்ததாகவும் சாட்சிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, போலீசார் இந்த விபத்து மரண வழக்கைத் திட்டமிட்டு கொலை வழக்காக மாற்றியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொலையை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக ஷேகப்பா, விஜயலட்சுமி, ஷேகப்பாவின் தம்பி மற்றும் 19 வயதுடைய மற்றொரு இளைஞர் ஆகியோரின் ஆடைகளைக் களைந்து, கட்டி வைத்து போலீசார் கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததாக குடும்பத்தினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டை போலீஸார் மறுத்துள்ளனர். சம்பவத்தன்று நடந்த சண்டையின் போது, தாய் விஜயலட்சுமி தனது 11 மாதக் குழந்தையை ஒரு துரதிர்ஷ்டம் என்று திட்டி உதைத்ததாக போலீசார் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.













