செய்திகள் :

11 மாதக் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்; கொன்றுவிட்டு நாடகமாடுகின்றனரா பெற்றோர்? பிண்ணனி என்ன?

post image

பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள அவலஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாகனூர் கிராமத்தில் வசிக்கும் ஷேகப்பா தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் தனது புகாரில், தனைவி விஜயலட்சுமி குழந்தைக்கு பால் புகட்டும்போது தூங்கியதால், குழந்தை 2 அடி உயர கட்டிலில் இருந்து விழுந்து காயமடைந்து இறந்துவிட்டதாகக் கூறி இருந்தார்.

கட்டிலில் இருந்து குழந்தை தவறி விழுந்தவுடன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை விரைவாகக் கொண்டு சென்றதாக ஷேகப்பா தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

குழந்தை
குழந்தை

போலீசார் முதலில் இதனைச் சந்தேகத்திற்குரிய மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.

குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெற்றோர் கூறியது அனைத்தும் பொய் எனத் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிகப்படியான உள் இரத்தப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததை உறுதி செய்தது. குழந்தையின் முகம், மார்பு, கால்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்தன.

மேலும் 2 அடி உயர கட்டிலில் இருந்து விழுந்தால் இவ்வளவு பெரிய உள் காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று மதிய உணவிற்கு ஷேகப்பா வீட்டிற்கு வந்தபோது கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் சண்டையிடும்போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தாய் விஜயலட்சுமி குழந்தையை உதைத்துள்ளார். தொடர்ந்து தந்தை ஷேகப்பா குழந்தையைத் தூக்கி தரையில் பலமாக வீசி எறிந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை ஷேகப்பா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொடூரக் குற்றத்தில் தாயின் முழுமையான பங்கு குறித்து பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான சண்டைகள் நடந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதோடு தந்தை ஷேகப்பாவின் மனைவி விஜயலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு அண்டை வீட்டுக்காரருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், அதன் காரணமாக கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விஜயலட்சுமிக்குத் தனது 11 மாதக் குழந்தை மீது எவ்வித பாசமும் இருக்கவில்லை என்றும், அவர் குழந்தையை மிகவும் அலட்சியமாகவே வளர்த்து வந்ததாகவும் சாட்சிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

நாடகமாடியதாகச் சொல்லப்படும் பெற்றோர்
நாடகமாடியதாகச் சொல்லப்படும் பெற்றோர்

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, போலீசார் இந்த விபத்து மரண வழக்கைத் திட்டமிட்டு கொலை வழக்காக மாற்றியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொலையை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக ஷேகப்பா, விஜயலட்சுமி, ஷேகப்பாவின் தம்பி மற்றும் 19 வயதுடைய மற்றொரு இளைஞர் ஆகியோரின் ஆடைகளைக் களைந்து, கட்டி வைத்து போலீசார் கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததாக குடும்பத்தினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டை போலீஸார் மறுத்துள்ளனர். சம்பவத்தன்று நடந்த சண்டையின் போது, தாய் விஜயலட்சுமி தனது 11 மாதக் குழந்தையை ஒரு துரதிர்ஷ்டம் என்று திட்டி உதைத்ததாக போலீசார் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.

`எனக்கு தனியாக செய்ய துணிச்சல் இல்லை... நீயும் வா!'- புனே தொழிலதிபர் கொலையில் வெளியான `பகீர்' தகவல்

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி ஷியா கோயலுக்கு, ஏற்கெனவே அவரது காதலன் சேத்தன் சவுத்ரி என்ற நபருடன் ரகசியத் திருமணம் நடந்துள்ளது, போலீஸ் வ... மேலும் பார்க்க

"அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் காதலிக்கு ஐபோன்" - கைதான ஊழியர் வாக்குமூலம்

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் அப்பணத்தைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. இத்திருட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இது தொடர... மேலும் பார்க்க

சென்னை: தங்கக்காசு மோசடியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது - அடுத்து சிக்கப் போவது யார்?

சென்னையில் உள்ள தனியார் வங்கியில், ஊழியராகப் பணியாற்றிவரும் ராஜன் (பெயர் மாற்றம்) என்பவரிடம் கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அப்போது பிரபுமணி, ‘4,500 ரூபாய... மேலும் பார்க்க

விருதுநகர்: சிறுமி மீது கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சியா? தட்டிக்கேட்ட தந்தைக்குக் கொலை மிரட்டல்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில்... மேலும் பார்க்க

`அவள் எனக்கு மட்டும்தான்’ - வேறொருவரின் மனைவியுடன் தொடர்பிலிருந்த இருவர்; கொலையில் முடிந்த கொடூரம்

வேலூர் அருகேயுள்ள சதுப்பேரியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் சிறுகாஞ்சியிலுள்ள விவசாய நிலப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் க... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் கட்டில்கள் திருடிய முன்னாள் மாணவன்; காவலரால் கையும் களவுமாகச் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரபலமான மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அங்கமாலி, சக்குவீடு பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன் (23) என்பவர் தாவரவியல் பிரிவில் படித்துவந்தார். கடந்த 2024-ம் ஆண்... மேலும் பார்க்க