செய்திகள் :

13 வருட கோமா: 31 வயது இளைஞரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமா உச்ச நீதிமன்றம்?

post image

கடந்த 13 ஆண்டுகளாக ஆழ்ந்த கோமா நிலையில் (Vegetative State) இருக்கும் 31 வயது இளைஞரான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கருத்தைப் பதிவு செய்துள்ளது.

2013-ஆம் ஆண்டு மொகாலியில் உள்ள தனது கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஹரிஷ் ராணா, அதன் பிறகு சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார். அவரது தந்தை அசோக் ராணா, தனது மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமலும், சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாததாலும், மகனைத் தானாக மரணிக்க அனுமதிக்க வேண்டும் (Passive Euthanasia) என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த அறிக்கையில், ஹரிஷ் ராணாவின் உடல் முழுவதும் படுக்கைப் புண்கள் (bed sores) அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"இந்த அறிக்கை மிகவும் மனவேதனையை அளிக்கிறது; அந்த இளைஞரை இதே நிலையில் தொடர்ந்து இருக்க விடுவது மனிதாபிமானமற்றது" என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக, ஹரிஷ் ராணாவின் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் ஜனவரி 13-ஆம் தேதியன்று நீதிபதிகள் தங்களது அறையில் (Chambers) பெற்றோரைச் சந்தித்து அவர்களின் நிலையை அறிய உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்

இந்தியாவில் 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பின்படி, குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குச் செயற்கை மருத்துவ உதவிகளை விலக்கிக் கொள்வதன் மூலம் (Passive Euthanasia) உயிரை எடுக்க அனுமதியுண்டு.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, ஹரிஷ் ராணாவின் பெற்றோரின் விருப்பத்தையும், மருத்துவ உண்மைகளையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கும்.

அமலாக்கத்துறை டிஜிபி-க்கு அனுப்பிய கடிதம் வெளியான விவகாரம் - ஆதி நாராயணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழ்நாடு டிஜிபி-க்கு அமலாக்கத்துறை எழுதிய ரகசியக் கடிதம் வெளியான விவகாரத்தில், மருதுசேனை என்ற அமைப்பின் தலைவர் ஆதி நாராயணனின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

`கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும்!'- நீதிபதி நிஷாபானுவுக்கு குடியரசு தலைவர் உத்தரவு!

"நீதிபதி ஜெ.நிஷாபானு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பணியில் சேரவேண்டும்" என்று குடியரசு தலைவர் கெடு விதித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முஏற்... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `உயர் நீதிமன்றம் விசாரணைகளை நடத்திய முறையில் செயல்முறை மீறல்கள்..!’ - உச்ச நீதிமன்றம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.மதுரை உயர் நீதி... மேலும் பார்க்க

"ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல" - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

"பல்கலை பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல, இதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிக... மேலும் பார்க்க

"திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்"- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்" - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும்.ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற அனு... மேலும் பார்க்க