செய்திகள் :

3-வது ஒருநாள்: நியூசி.யை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!

post image

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.

இதையும் படிக்க: பிஜிடி தொடரில் காயத்துடன் விளையாடிய லயன்..! இலங்கை தொடரில் விளையாடுவாரா?

இலங்கை - 290/8

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 42 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 54 ரன்களும், ஜனித் லியாநாகே 53 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை ஆறுதல் வெற்றி

291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 81 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நாதன் ஸ்மித் 17 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது.

இதையும் படிக்க: இலங்கை தொடரில் மீட்சி அடைவேன் : மெக்ஸ்வீனி

இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ, மஹீஷ் தீக்‌ஷனா மற்றும் ஈஷன் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜனித் லியாநாகே ஒரு விக்கெடிட்டினைக் கைப்பற்றினார்.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த இலங்கை அணி, கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. அஷிதா ஃபெர்னாண்டோ ஆட்ட நாயகனாகவும், மாட் ஹென்றி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்த ஸ்ரேயாஸ் ஐயர் (விடியோ)

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக தன்னை தேர்ந்தெடுத்தற்கு அணி நிர்வாகத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. க... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாதது ஏன்? ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாததற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் சீன் அப்பாட் மனம் திறந்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறவில்லை: வங்கதேச வீரர்

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் ம... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம்... மேலும் பார்க்க

இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி

ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்ட் டெஸ்ட் தொடரி... மேலும் பார்க்க

2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஆட விரும்பும் ஸ்டீவ் ஸ்மித்!

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் விளையாட விரும்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடர் சமீபத்தில் நடந்து ம... மேலும் பார்க்க