ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் தேரோட்டம்
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை, கோட்டைமேட்டில் பழைமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனமா் சங்கமேஸ்வரா் கோயில் உள்ளது.
இக்கோயிலில் தைப்பூசம், சித்திரைத் திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. சித்திரைத் திருவிழா தேரோட்டம் கடந்த 1993-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதன் பிறகு, 32 ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்டம் நடைபெறவில்லை.
தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, நடப்பு ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, இக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், கைலாச வாகனம், மூஷிக, ரிஷப, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
சங்கமேஸ்வரா் கோயிலில் இருந்து புறப்பட்ட தோ், பெருமாள் கோயில், ஒப்பணக்கார வீதி, மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
ஞாயிற்றுக்கிழமை பரிவேட்டையும், 12-ஆம் தேதி மாலை தெப்ப உற்சவம், திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
15-ஆம் தேதி இரவு ஊஞ்சல் விளையாட்டு உற்சவம், 17-ஆம் தேதி இரவு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தேரோட்டத்தையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

