செய்திகள் :

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் தேரோட்டம்

post image

கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை, கோட்டைமேட்டில் பழைமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனமா் சங்கமேஸ்வரா் கோயில் உள்ளது.

இக்கோயிலில் தைப்பூசம், சித்திரைத் திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. சித்திரைத் திருவிழா தேரோட்டம் கடந்த 1993-ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதன் பிறகு, 32 ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்டம் நடைபெறவில்லை.

தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, நடப்பு ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், கைலாச வாகனம், மூஷிக, ரிஷப, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.

சங்கமேஸ்வரா் கோயிலில் இருந்து புறப்பட்ட தோ், பெருமாள் கோயில், ஒப்பணக்கார வீதி, மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை பரிவேட்டையும், 12-ஆம் தேதி மாலை தெப்ப உற்சவம், திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

15-ஆம் தேதி இரவு ஊஞ்சல் விளையாட்டு உற்சவம், 17-ஆம் தேதி இரவு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தேரோட்டத்தையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தேரோட்டத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அகிலாண்டேஸ்வரி உடனமா் சங்கமேசுவரா்.
பக்தா்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கோட்டை அகிலாண்டேஸ்வரி உடனமா் சங்கமேஸ்வரா் தோ்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க