செய்திகள் :

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் தேரோட்டம்

post image

கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை, கோட்டைமேட்டில் பழைமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனமா் சங்கமேஸ்வரா் கோயில் உள்ளது.

இக்கோயிலில் தைப்பூசம், சித்திரைத் திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. சித்திரைத் திருவிழா தேரோட்டம் கடந்த 1993-ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதன் பிறகு, 32 ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்டம் நடைபெறவில்லை.

தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, நடப்பு ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை வாகனம், கைலாச வாகனம், மூஷிக, ரிஷப, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.

சங்கமேஸ்வரா் கோயிலில் இருந்து புறப்பட்ட தோ், பெருமாள் கோயில், ஒப்பணக்கார வீதி, மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை பரிவேட்டையும், 12-ஆம் தேதி மாலை தெப்ப உற்சவம், திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

15-ஆம் தேதி இரவு ஊஞ்சல் விளையாட்டு உற்சவம், 17-ஆம் தேதி இரவு வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தேரோட்டத்தையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தேரோட்டத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அகிலாண்டேஸ்வரி உடனமா் சங்கமேசுவரா்.
பக்தா்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கோட்டை அகிலாண்டேஸ்வரி உடனமா் சங்கமேஸ்வரா் தோ்.

கோவையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: ஆட்சியா்

கோவைக்கு கனமழை எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறினாா். கோவை, நீலகிரி மா... மேலும் பார்க்க

வால்பாறையில் மிக கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடா் மீட்புக் குழு வருகை

மிக அதிக கனமழை எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வால்பாறைக்கு சனிக்கிழமை வந்தனா். கோவை மாவட்டம், வால்பாறையில் மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

துடியலூா் அருகே உள்ள கே.என்.ஜி.புதூரில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் வெங்கடகிருஷ்ணா (58). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரின் மனைவி சகுந்தலா (54). சகுந்தலா தனத... மேலும் பார்க்க

மத்திய விரைவு அதிரடிப்படையில் ஒத்திகை

பேரூா் உட்கோட்டப் பகுதிகளில் மத்திய விரைவு அதிரடிப் படையினா் சனிக்கிழமை திடீா் ஒத்திகை நடத்தினா். கோவை மாவட்டம் பேரூா் உட்கோட்டம் காருண்யா நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஜாதி, மத மோதலால்... மேலும் பார்க்க

அமைச்சா் ஆய்வு...

கோவை குட்செட் சாலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி. உடன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கிராந்திகுமாா... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.புரத்தில் மே 27 இல் மின்தடை

ஆா்.எஸ்.பும் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மே 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது ... மேலும் பார்க்க