செய்திகள் :

“50% நல்லது நடந்துள்ளது; 50% நல்லது நடக்க வேண்டியதுள்ளது" - திமுக ஆட்சி குறித்து பிரேமலதா

post image

தூத்துக்குடியில்  தே.மு.தி.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில்  கலந்து கொள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் விமானத்தில் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளின் மீதும் அனைத்து தலைவர்களின் மீதும் சி.பி.ஐ வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, லஞ்ச ஊழல் வழக்கு போன்ற எல்லா வழக்குகளும் நிலுவையில்  உள்ளது. இதை வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கிறார்கள்.   தே.மு.தி.க., வரும் 2026-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி.

பிரேமலதா

 தே.மு.தி.க.,  யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்கள்தான்  தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு எதிர்காலத்தில் எந்த கூட்டணி நல்லதோ கழக நிர்வாகிகள் யாரை அதிகம் விரும்புகிறார்களோ  நம் கட்சிக்கு எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்த வகையில் தாயாக இருந்து கழகத்தை கட்டி காக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. இந்த கடமையை கேப்டன் என் கையில் கொடுத்திருக்கிறார் சரியான நேரத்தில் அறிவிப்பேன். கூட்டணி குறித்து கூறுவதற்கு நேரம் இருக்கிறது.

வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கபட இருக்கிறது.  பிரதமர், அவருடைய கூட்டணிக்கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருடைய கூட்டணி சார்பாக பங்கேற்றிருக்கிறார்.  அது குறித்து நான் ஒன்னும் சொல்ல முடியாது. விஜய் படத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் கொடுத்து வருவது பா.ஜ.க-வா அல்லது தேர்தலுக்காக அரசியலுக்காக செய்கிறார்களா, படத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று  அத்திரைப்படத்தின் ஹீரோவான விஜய்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஸ்டாலின்

சட்டம் தன் கடமையை செய்யும் அதைத்தான் நான் சொல்கிறேன். விஜய்யை கூப்பிட்டு பிரஸ் மீட் நடத்த வேண்டும். நான் ஆவலோடு இருக்கிறேன். தி.மு.க., கடந்த 5 ஆண்டு காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கருத்து இருக்கிறது. தி.மு.கவின் ஆட்சியால் 50% நல்லதும் நடந்திருக்கிறது. 50% நடக்க வேண்டியதும் இருக்கிறது” என்றார்.

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்... மேலும் பார்க்க

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க