செய்திகள் :

'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?

post image

கனடா - வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் டாப் சாய்ஸ்களில் ஒன்று.

ஆனால், இந்த சாய்ஸ் இனி தொடருமா என்கிற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது.

எவ்வளவு நிராகரிப்புகள்?

கடந்த ஆகஸ்ட் மாதம், 74 சதவிகித இந்தியர்களின் கல்வி விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது கனடா அரசு. இந்த சதவிகிதம் கடந்த ஆண்டைவிட, இரண்டு மடங்கு தாண்டியது.

கனடா - கல்வி விசா
கனடா - கல்வி விசா

கடந்த ஆகஸ்ட் மாதம், கிட்டத்தட்ட 4,500 இந்தியர்கள் கனடா நாட்டின் கல்வி விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,200 விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு அரசு பல நாடுகளைச் சேர்ந்த விசா விண்ணப்பங்களை நிராகரித்து இருந்தாலும், இந்தியர்களின் கல்வி விசா தான் பெருமளவு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கெடுபிடி ஏன்?

2023-ம் ஆண்டு, கனடா அரசு இந்தியாவில் இருந்து வந்த 1,500 போலி கல்வி விசா விண்ணப்பங்களைக் கண்டுபிடித்ததன் விளைவே இந்தியர்களுக்கு இந்தக் கெடுபிடி.

போலி ஆவணங்களைக் கொடுத்து பல இந்தியர்கள் கல்வி விசாவைப் பெற்றிருக்கின்றனர். நிரந்தர குடியுரிமை சோதனையின்போது, இந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனால்தான், தற்போது, இந்தியர்களின் நிதி இருப்பு முதல் கல்வி ஆவணங்கள் வரை மிகவும் கவனமாக ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த ஆய்வே கிட்டத்தட்ட விசா நேர்காணலைப் போல நடத்தி வருகிறது கனடா அரசு.

உஷாராக வேண்டியது அவசியம்!

உலக அளவிலேயே, கனடா கல்வி விசா நிராகரிப்பு விகிதம் 40 சதவிகிதம் இருக்கும்பட்சத்தில், இந்தியாவிற்கு மட்டும் 74 சதவிகிதம்.

கனடா நாட்டின் இந்த நகர்வு... இனி வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்தியர்கள் கனடாவைத் தாண்டி, வேறு நாட்டைத் தேடுவது அவசியமாகிறது என்பதை புரிய வைக்கிறது.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க