செய்திகள் :

8 ஆண்டுகளுக்குப் பிறகு, "வருமான வரி தாக்கல் செய்தீர்களா?" என்று அரசாங்கம் கேட்டால்?| பணம் வளர்ப்போம்

post image

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம் என்பது கடந்த அத்தியாயத்தில் நமக்குத் தெரிந்திருக்கும்.

ஒருவேளை, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் என்னென்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் ஆடிட்டர் கிரி பாபு.

"வருமான வரிக் கணக்குத் தாக்கலைப் பொறுத்த வரை, ஒரு இடத்தைக் காலியாக வைத்திருந்தால் அரசே எந்த இடத்தை ஃபில் செய்துகொள்ளும்.

இதனால், என்ன பிரச்னை வரலாம் என்பதை ஒரு உதாரணத்தில் பார்க்கலாம். நீங்கள் சிறுகச் சிறுக உங்கள் வங்கிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கலாம்.

ஆனால், அதை அரசாங்கம் உங்கள் வருமானமாகக் கருதி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.

அதனால், எதுவாக இருந்தாலும், அதை நீங்கள் ஃபில் செய்துவிடுவது நல்லது.

ஆடிட்டர் கிரி பாபு
ஆடிட்டர் கிரி பாபு

இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் படி, வருமான வரித் துறை உங்களுடைய ஓராண்டு வருமானம் குறித்து 8 ஆண்டுகள் வரை கேட்கலாம். அதாவது, 2026-ம் ஆண்டு வருமானம் குறித்து 2033-ம் ஆண்டு வரை கணக்கு கேட்கலாம்.

எட்டு வருடங்கள் குறித்து உங்களுடைய வருமானத்தைக் குறித்து கேட்கும்போது, உங்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாமல் போகக்கூடும். அதனால், இப்போதே பக்காவாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது.

முக்கியமாக, வருமான வரித் துறையே உங்களுடைய வருமானத்தைக் கணக்கில் கொள்ளும் போது, ஃபார்ம் 168-ல் (முன்னால் 26AS, AIS) இருக்கும் அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்ளும். அதனால், மிக மிகக் கவனம் தேவை.

மேலும், உங்களுக்கு வருமான வரி விலக்கு இருந்தாலும், இந்தச் சூழலில், வருமான வரி விலக்கு கிடைக்காது.

அதற்குப் பதிலாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாததற்கு வரி, அதற்கான வட்டி, அபராதம் என அனைத்தும் உங்கள் தலையில் விழுந்துவிடும்.

வருமான வரி
வருமான வரி

முன்பு, மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாலும், இப்போது செய்யலாம். ஆனால், இப்போது அப்படி இல்லை.

அந்தந்த ஆண்டிற்கு அப்போதே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட வேண்டும்.

ஒருவேளை, வரி ஏதேனும் நீங்கள் கட்ட வேண்டியதாக இருந்தால் மட்டுமே, ஃபைல் செய்ய முடியும். ஆனால், அதற்கும் அபராதம் உண்டு. ஆனால், ரீஃபண்ட் இருந்தாலும், அது கிடைக்காது".

'குறைஞ்ச சம்பளம் தானே'னு வருமானம் கணக்குத் தாக்கல் செய்யாமல் இருந்தா, கடன்.? | பணம் வளர்ப்போம்

'குறைவாக தான் வருமானம் வாங்குகிறேன்... நான் ஏன் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாமல் போனால் என்ன தவறு?' - இப்படி பல கேள்விகள் நம்மிடையே இருக்கிறது. நம்முடைய கேள்விகளுக்கு பதிலும், வ... மேலும் பார்க்க

100%, 50%, 25%, 10%... முதலீட்டில் உங்கள் லாபத்தை எப்படி கணக்கிடுவது என்று தெரியுமா?

''லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவா வேண்டும்? அதுகூடவா நாங்கள் தெரியாமல் இருக்கிறோம்...'' இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றும்.''ஒரு முதல... மேலும் பார்க்க

Retirement: அரசு ஊழியர்களே! ஓய்வுக்காலத்துக்குப் பின் உங்களை யார் காப்பாற்றுவார்கள்?

நீங்கள் அரசு ஊழியரா?பணி ஒய்வு பெறப்போகும் அந்தக் கடைசி நாளை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?கடந்த முப்பது வருடங்களாக உங்கள் வாழ்க்கை ஒரு அழகான தாள லயத்தில் இயங்கி இருக்கும். ஒவ்வொரு மாதமும் ... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கல் செய்யும் போது, Form 16 மட்டுமல்ல; Form 26AS ரொம்ப முக்கியம் | பணம் வளர்ப்போம்

இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால், பலர் ஆடிட்டர்களைத் தேடி ஓடுவதில்லை. அவர்களாகவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுகின்றனர். அதனால், அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்த... மேலும் பார்க்க

NRI: லாபத்தை சரியாக கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிடில், தவறான திட்டங்களில் பணத்தை இழப்பீர்கள்!

''லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவா வேண்டும்? அதுகூடவா நாங்கள் தெரியாமல் இருக்கிறோம்...'' இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றும்.''ஒரு முதல... மேலும் பார்க்க

புதுசு, பழசு - இந்த நிதியாண்டிற்கு எந்த வருமான வரி முறை நல்ல சாய்ஸ்? | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க