செய்திகள் :

Assam : கரைந்த காங்கிரஸ்... அஸ்ஸாமில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக!

post image

அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 722 பேர் இதில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க முன்னிலையில் இருந்து வந்தது. இத்தேர்தலில் முதல்வர் ஹிமந்த சர்மா ஜலுபெரி தொகுதியில் போட்டியிட்டார். மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகாய் எப்படியும் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் வேலை செய்தார். அவர் ஜொர்ஹட் தொகுதியில் போட்டியிட்டார். அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பா.ஜ.க போட்டியிட்டது. பா.ஜ.க 90 தொகுதியிலும், காங்கிரஸ் 99 தொகுதியிலும் போட்டியிட்டன.

இத்தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க கூட்டணியே முன்னிலையில் இருந்து வந்தது. மொத்தமுள்ள 126 தொகுதியில் பா.ஜ.க 97 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.

கடந்த தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை வெறும் 26 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கொகாய் மற்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தாங்கள் போட்டியிட்ட தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க ஆட்சியமைக்க தேவையான அறுதி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இத்தேர்தலில் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பொறுப்பை ஏற்று பணியாற்றினார். அப்படி இருந்தும் கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட இம்முறை காங்கிரஸ் மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மாவும் ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார்.

ஆனால் ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். 2021ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றபோது முதல் முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வரானார்.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க