Parasakthi : "என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்!"...
BB Tamil 9: "எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.!" - வியானா சொல்வது என்ன?
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.

அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.
அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.
குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார்.
வலுக்கும் எதிர்ப்புகள்
இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வார்னிங் கொடுத்த பிரஜின்
செய்தியாளர்களைச் சந்தித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின், " நான் பிக் பாஸ் செலபிரேஷன் ரவுண்ட்டுக்கு உள்ள போவேன். அப்படி நான் போகும்போது கம்ருதீன் உள்ள இருந்தா அது அவருக்கு பேட் டைம்.
அப்படி உள்ள இல்லன்னா அவருக்கு குட் டைம். நான் வார்னிங் கொடுக்குறேன்" என்று வார்னிங் கொடுத்திருந்தார்.
வியானா பதிவு
இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய வியானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "நேற்று பிக் பாஸில் நடந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன்.
கார் டாஸ்க் பார்த்தேன். சாண்ட்ராவிற்காக மிகவும் வருந்தினேன். ஆனால் டிக்கெட் டு ஃபினாலேவின் இரண்டாவது டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் இது போன்று வன்முறையாகத்தான் விளையாடினார்கள்.
“இது தான் கேம் பிளே செய்யும் முறை” என்று போட்டியாளர்கள் அவர்களை நியாயப்படுத்தி கொண்டார்கள்.

ஆனால் கார் டாஸ்க்கில் மட்டும் வேறு விதமாக போட்டியாளர்கள் பேசுகிறார்கள். கார் டாஸ்க் இப்படி விளையாடக் கூடாது என்று இருந்தால் பிக்பாஸ் டாஸ்க்கை நிறுத்தி இருப்பார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை.
Face Task, Thoppi Task, Captaincy Task, Coin Task, Juice Task என அனைத்து டாஸ்க்கிலும், சில போட்டியாளர்கள் மிகவும் அதிரடியான முறையில் விளையாடினார்கள். அப்போது யாரும் அதைப் பற்றி பேசவில்லை.
இப்போது, ஒரு சில போட்டியாளர்கள் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமாக மாற்றி பேசுகிறார்கள்.
வேறு ஒருவர் இதே செயல்களை செய்திருந்தால், அது சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். எல்லாமே யார் இதனை செய்கிறார் என்பதில் தான் இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.
விளக்கம் அளித்த வியானா
வியானாவின் இந்தப் பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் அதற்கு விளக்கம் அளித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
"நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு ஆதரிக்கவில்லை. நான் பிக் பாஸ் வீட்டின் உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னேன்.
எப்படி சம்பவங்கள் சில குறிப்பிட்ட கதைக்களங்களுக்கு ஏற்ப மாறி காட்டப்படுகின்றன என்பதையே சொல்கிறேன்.

முடிவில், ஒவ்வொருவரும் தங்களுடைய விளையாட்டை ஆடுகிறார்கள்.
இப்போது எதிர்வினை தெரிவிக்கும் போட்டியாளர்கள் அதிரடியான முறையில் விளையாடி, மற்றவர்களை தாக்கியும் இருக்கிறார்கள்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.



















