செய்திகள் :

BiggBoss10: ``போனவாரமே சொல்லிருக்கனும்... அதான் இப்போ சொல்றோம்" - விஜய் சேதுபதி

post image

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப். 6 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஷாதிகா தலைவர் பதவி குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இது குறித்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அதில், ``பிக் பாஸ் 10 நிகழ்ச்சி பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடும் கருத்துகள் அல்லது சம்பவங்களை, வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர், அல்லது அமைப்பு போன்றவற்றை குறித்து, கருத்து தெரிவிப்பதாகவோ கருதக்கூடாது." என விளக்கமளித்தது. இந்த நிலையில், இன்று வெளியான பிக்பாஸ் புரோமோவில் விஜய் சேதுபதி, ``இந்த மேடையில நாங்க பேசுற கருத்துக்கள் எல்லாமே இந்த வீட்ல இருக்கிற என்னுடைய கன்டென்டஸ்டக்கும் எங்களுக்குமானது மட்டுமே.

இது வெளியிலிருக்கும் யாரையும், எந்த அமைப்பையும் சார்ந்து குறிப்பிடுவது அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதை நான் சொல்லாமலே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். இதை போன வாரம் சொல்லி இருக்கணும் சரி சொல்ல வேண்டிய தேவையாகி போச்சு... அதான் சொல்றோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

`இப்படி மென்ட்டல் டார்ச்சர் பண்ணாதீங்க' - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட அயலக மாணவர்; உதயநிதி கண்டனம்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக கடந்த மாதம் வீடியோ ஒன்ற... மேலும் பார்க்க

``என் வீட்டுக் காவலாளியே என்னை விரட்டினார்" - பிச்சைக்காரராக ஒருநாள் வாழ்ந்த எம்எல்ஏ; காரணம் என்ன?

மும்பையின் கட்கோபர் கிழக்குத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பராக் ஷா, ரூ. 5,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட இந்தியாவின் மிகப்பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர். பராக் ஷாவின் ஆன்மீக குரு, ஜைன மதத்தைப் பின்பற்றும்... மேலும் பார்க்க

``அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகம்" - குடியரசுத் தலைவரின் வைரல் பாதுகாவலர் பேட்டி!

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு உதவியாளராகப் (Aide-de-Camp - ADC) பணியாற்றியவர் முன்னாள் சிறப்புப் படை அதிகாரி மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அ... மேலும் பார்க்க

`கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' - அசௌகரியத்துடன் திரியும் காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன?

அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்தப் பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் மாட்டிக்கொண்ட நிலையில் காட்டு யானை ஒன்று உலா வந்த காட்சி அ... மேலும் பார்க்க

ஈபிள் கோபுரம் சென்ற சாமியார்கள்: `சமத்துவத்தை விட்டுத்தர முடியாது' - பெண் ஊழியர்கள் போராட்டம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே 'BAPS' (போச்சசான்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பின் புதிய கோயில் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர... மேலும் பார்க்க

``எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" - இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்... மேலும் பார்க்க