செய்திகள் :

CJP: 'உங்க சினிமாவை இனி.!" - போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மோகன்லால் மகள் மீது சைபர் அட்டாக்

post image

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் `துடக்கம்' என்ற சினிமா மூலம் திரைத்துறையில் அடியெடுத்துவைத்துள்ளார். அவர், ​டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார்.

விஸ்மயா மோகன்லால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தனது சொந்த மக்களுக்கு எதிராக ஒரு ஜனநாயக நாடு இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமா? நாட்டின் குடிமக்கள் தங்களது குரலை உயர்த்தும்போது, அதற்குப் பதிலளித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாகக் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டால், நாம் எந்த வகையான ஜனநாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். ​

விஸ்மயாவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் வலைத்தள பக்கங்களில் எதிர்ப்புதெரிவித்து அதிகமான பின்னூட்டங்கள் வந்தன. விஸ்மயாவின் தந்தை மோகன்லாலின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பல்வேறு பதிவுகளுக்கும் எதிர்ப்பு கருத்துகள் பின்னூட்டங்களாக பதிவிடப்பட்டு வருகின்றன.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

எதிர்ப்பு பின்னூட்டங்கள் சிலர், ​"பிரித்விராஜுக்கு என்ன நிலைமை ஏற்பட்டது என்று உனது அப்பாவிடம் கேட்டால் சொல்வார்! திடீரென்று என்ன ஒரு குடிமைப் பொறுப்பு!" எனவும், "திரைப்படத்திற்கு மக்களை வரவழைக்க இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்தால் போதும் என்று யாராவது யோசனை சொன்னார்களா?" எனவும் சிலர் பதிவிடுள்ளனர்.

"பஹல்காமில் மதம் கேட்டுச் சாதாரண மனிதர்களைக் கொன்றபோது மௌனமாக இருந்தவர்களுக்கு, இப்போது பேசுவதற்கு ஆற்றல் வந்ததில் மகிழ்ச்சி" என்று காரசாரமாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மோகன் லால்

இன்னும் சிலர், "மோகன்லால் பெயரைக் கெடுத்துவிட்டாயே, இனி நானும் என் குடும்பமும் உங்களது சினிமாவை பார்க்கத் திரையரங்கிற்கு வரமாட்டோம்" என கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.​ மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிற மலையாளத் திரைத்துறை பிரபலங்களுக்கும் எதிராக இதே பாணியில் இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரபல மலையாள நடிகர்களான டொவினோ தாமஸ், பார்வதி திருவோத்து ஆகியோர் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளனர். ​மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சினிமா பிரபலங்களுக்கும் எதிராக தனிப்பட்ட முறையில் விமர்சனங்களும், அவர்களது திரைப்படங்களைப் புறக்கணிக்கப் போவதாக வரும் பின்னூட்டங்களும் சமூக வலைத்தளங்களில் தீவிரமடைந்து வருகின்றன.

ஜந்தர் மந்தரில் தடியடி: "ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்!" - திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அ... மேலும் பார்க்க

"கடமை இரண்டு திசைகளில் அழைக்கிறது; சென்னை செல்கிறேன், இதனால்.!" - மாணிக்கம் தாகூர்

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கலந்து வந்தார். இன்று அவர் சென்னை வரும் சூழலில், அதுகுறித்து தனத... மேலும் பார்க்க

`இளைஞர்களின் நலனும் எதிர்காலமும்தான் மிக முக்கியம்; எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.!' - பிரதமர் மோடி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி 34 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூ... மேலும் பார்க்க

'ஹவுஸ்புல்' காக்ரோச் போராட்டம்; தி.நகரில் திரளும் மாணவர்கள்! - பாஜக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

டெல்லியின் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையிலும், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.Cockroach Protestடெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 2... மேலும் பார்க்க

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க