செய்திகள் :

"கடமை இரண்டு திசைகளில் அழைக்கிறது; சென்னை செல்கிறேன், இதனால்.!" - மாணிக்கம் தாகூர்

post image

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கலந்து வந்தார்.

இன்று அவர் சென்னை வரும் சூழலில், அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாணிக்கம் தாகூர்.

"இன்று என் கடமை இரண்டு திசைகளில் என்னை அழைக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (DCC) தலைவர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைப்பதற்காக சென்னை செல்கிறேன்.

காங்கிரஸ் போராட்டம்
காங்கிரஸ் போராட்டம்

ஆகஸ்ட் 1, 2026 வரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாம், கட்சியை அடித்தளத்தில் மேலும் வலுப்படுத்தும் முக்கியமான பணியாகும்.

இதன் காரணமாக இன்று நாடாளுமன்றத்திலும், நடைபெறும் போராட்டத்திலும் என்னால் பங்கேற்க முடியவில்லை.

ஆனால், எங்கள் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை; எந்த சமரசமும் இல்லை.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

NEET-UG 2026 வினாத்தாள் கசிவு, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களது குடும்பங்களும் வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது. அமைச்சரின் மௌனமோ, மத்திய அரசின் தப்பிக்கும் முயற்சிகளோ, இந்த மாபெரும் துரோகத்தை மறைக்க முடியாது.

மாணவர்களின் எதிர்காலம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நீதி கிடைக்கும் வரை, பொறுப்புக்கூறல் ஏற்படும் வரை, எங்கள் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்". என்றிருக்கிறார்.

"மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.!"- நீட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் தொடர் போராட்டத்த... மேலும் பார்க்க

"அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது" - ஈரானின் 3 எச்சரிக்கை

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஈரான் எண்ணெய் மீதான கெடுபிடிகளைச் சற்று தளர்த்தியது. ஆனால், இப்போது மீண்டும் போர் தொடங்கியிருக்கும் சூழலில், அமெரிக்கா ஈரான் வர்த்தகத்தை இறு... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தரில் தடியடி: "ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்!" - திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அ... மேலும் பார்க்க

`இளைஞர்களின் நலனும் எதிர்காலமும்தான் மிக முக்கியம்; எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.!' - பிரதமர் மோடி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி 34 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூ... மேலும் பார்க்க

CJP: 'உங்க சினிமாவை இனி.!" - போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மோகன்லால் மகள் மீது சைபர் அட்டாக்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் `துடக்கம்' என்ற சினிமா மூலம் திரைத்துறையில் அடியெடுத்துவைத்துள்ளார். அவர், ​டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படுவதாக தனது இன்ஸ்ட... மேலும் பார்க்க

'ஹவுஸ்புல்' காக்ரோச் போராட்டம்; தி.நகரில் திரளும் மாணவர்கள்! - பாஜக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

டெல்லியின் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையிலும், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.Cockroach Protestடெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 2... மேலும் பார்க்க