செய்திகள் :

CJP: ``'ஜந்தர் மந்தர் சீசன் 2' மிக விரைவில்..." - அபிஜித் தீப்கே பேட்டி

post image

ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில் தொடங்கக்கூடும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய பெரிய அளவிலான போராட்டம் அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சிஜேபி, `அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்பாகத் தனது செயல்பாடுகள் தொடரும்' என அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அபிஜித் திப்கே, ``டெல்லி நாரைனாவில் புதன்கிழமை (12-ம் தேதி) நடைபெறவிருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் தொண்டர்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

அபிஜீத் திப்கே
அபிஜீத் திப்கே

ஆளும் பா.ஜ.க-வின் அழுத்தம் காரணமாக, கூட்டத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட மண்டப உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் முன்பதிவை ரத்து செய்துவிட்டனர். விழா மண்டபத்தை நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், நாங்கள் அங்கு சென்றபோது, 'எங்களுக்கு மேலிடத்து அழுத்தம் உள்ளது, எனவே உங்களுக்கு மண்டபத்தை தர முடியாது' என்று கூறிவிட்டனர்.
அருகிலுள்ள மற்ற இடங்களிலும் இதேபோன்று தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. CJP கூட்டங்களுக்கு இடம் தருவதைத் தடுக்கும் வகையில் மக்கள் மிரட்டப்படுகின்றனர். ஜந்தர் மந்தர் சீசன் 2 எப்போது தொடங்கும் என்று இன்ஸ்டாகிராமில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், 'ஜந்தர் மந்தர் சீசன் 2' மிக விரைவில் தொடங்கப் போகிறது." என்றார்.

தொகுதி மறுவரையறை: ``மோடியும், அமித்ஷாவும், RSS அமைப்பும் போடும் கணக்கு" - அமைச்சர் விஸ்வநாதன்

தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் ஆபத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று (12-ம் தேதி) வடசென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. அந்தப... மேலும் பார்க்க

"தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது"- நயினார் நாகேந்திரன்

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம... மேலும் பார்க்க

கரூர்: `ஏசி பேருந்துலாம் இருக்கட்டும்; எங்க ஊருக்கு எப்போ விடிவுகாலம்?'- பேருந்துக்கு ஏங்கும் மக்கள்

நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டோம். இந்த தருணத்தில் போக்குவரத்துத் துறையில் பல்வேறு உச்சம் தொட்டு சாதனை படைத்து வருகிறோம்.ஒருபுறம் புல்லட் ரயிலை நோக்கி நாம் சென்று கொண்டிரு... மேலும் பார்க்க

‘சுத்தமான பெட்ரோல் உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்?’ - E20 விவகாரத்தில் பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

இந்தியாவில் E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன. E20 பெட்ரோலால் வாகனங்களின் செயல்திறன் பாதிப்படைகிறது என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்... மேலும் பார்க்க

E20 பெட்ரோல்: `கிரீன் நேஷன் முன்னெடுப்பா... வாகனங்களுக்கு பேராபத்தா?' - கள நிலவரம் என்ன? | ஓர் அலசல்

எத்தனால் பெட்ரோலும் - எதிர்ப்பும்மத்திய அரசு 2014 முதல் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேற்கொண்டு ... மேலும் பார்க்க