செய்திகள் :

CJP பாணியில் ‘Dimagi Naxal Party’ - ஒரே நாளில் 1.6 லட்சம் பேர் ஃபாலோ; ஆனால் இப்போது? என்ன ஆனது DNP?

post image

சமூக வலைதளங்களில் புதிதாக உருவான ஒரு Instagram பக்கம், தொடங்கிய ஒரே நாளில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றது. அதைவிட ஆச்சரியம்... வேகமாக வைரலான அந்தப் பக்கம், அதே வேகத்தில் தற்போது காணாமல் போயிருக்கிறது.

‘Dimagi Naxal Party’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த இந்த Instagram கணக்கில் 62 பதிவுகள் இருந்ததாகவும், 35 கணக்குகளை அது ஃபாலோ செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Instagram-ன் தகவல்படி, இந்தக் கணக்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அதன் பயனர் பெயர் ஒருமுறை மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், இந்தக் கணக்கை யார் இயக்கியது என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்தப் பெயர் திடீரென கவனம் பெற முக்கிய காரணமாக அமைந்தது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை. ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் பேசிய அவர், ஆயுதம் ஏந்திய நக்சலிசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், ‘Dimagi Naxals’ (அறிவுசார் நக்சல்கள்)எனக் குறிப்பிட்டு புதிய வகையான அச்சுறுத்தல் குறித்தும் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து, அந்த வார்த்தையையே பெயராகக் கொண்ட Instagram பக்கம் திடீரென உருவாகி, மிகக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.

இந்தக் கணக்கு யாருடையது? ஏன் தொடங்கப்பட்டது? இவ்வளவு வேகமாகப் பிரபலமான பிறகு ஏன் காணாமல் போனது? — இதற்கான தெளிவான பதில்கள் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களின் கருத்தின் அடிப்படையில் கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி எனும் சமூக ஊடகம் தொடங்கப்பட்டு, பின்னர் அது களத்தில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக பேராடி கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் இந்த பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

'ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்' என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிற... மேலும் பார்க்க

`போர் தொடங்கிய காரணம் மாறிவிட்டதா?' ரஷ்யா - உக்ரைன் சண்டை ஏன் தொடர்கிறது?

4 ஆண்டுகள் 5 மாதங்களைக் கடந்துள்ளது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர். இத்தனை நாள்கள் தொடர்ந்தும், இந்தப் போரில் சமாதனம், முடிவு ஆகிய வார்த்தைகளுக்கு இடமில்லாமல் இருக்கிறது. இ... மேலும் பார்க்க

பியூஷ் கோயல் முதல் ஸ்மிருதி இரானி வரை.! - பாஜக-வில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளபட்ட அதிரடி மாற்றங்கள்

பாஜகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் இங்கே!தேசிய துணைத் தலைவர்கள் (National Vice Presidents)வசுந்தரா ராஜே சிந்தியா – ராஜஸ்தான்தீரத் சிங் ராவத் – உத்தரகண்ட்ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சாலை இல்லாததால் உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; மக்களைத் திரட்டி சாலையமைத்த பழங்குடி கணவன்!

மகாராஷ்டிராவில் மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குப் போதிய சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. அப்படியே சாலை வசதி இருந்தாலும் அவை மிகவும் மோசமாகச் சேதம் அடைந்து காணப்படுகிறது. மகாராஷ்டிராவின் சந்திராப... மேலும் பார்க்க

ஒரு அமெரிக்க வீரரை பிடித்தாலோ, கொன்றாலோ 30,000 டாலர் பரிசு; பெண்களுக்கு இரட்டிப்பு.! ஈரானின் அதிரடி

“அமெரிக்க வீரரைப் பிடித்தாலும், கொன்றாலும் பரிசு...” — ஈரான் ராணுவத்தின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கும் அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை... மேலும் பார்க்க

"TVK அமைச்சர் போதைப்பொருள் வீடியோ எங்கள் ஆட்சியில் வந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்"- உதயநிதி

சட்டமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தொடர்ந்து போதைப்பொருளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனை... மேலும் பார்க்க