செய்திகள் :

CJP பேச்சுவார்த்தைக்கு ஜே.பி.நட்டாவை `டிக்' செய்தது ஏன்? பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

post image

நீட், க்யூட் தேர்வுகள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி.

நேற்று இந்தப் போராட்டத் தரப்பிற்கும், மத்திய அரசுக்கும் இடையே முதல் சந்திப்பு நடந்தது.

காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் இருந்து இருவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை கடிதத்தை வழங்கினர்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

நீட், கியூட் தேர்வுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால், அந்தத் துறை அமைச்சர் தான் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடப்பதால், தர்மேந்திர பிரதான் உடன் காக்ரோச் ஜனதா கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்த்த முடியாது தான்.

ஆனால், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு குறிப்பாக ஜே.பி.நட்டாவை ஏன் தேர்ந்தெடுத்தது என்கிற கேள்வி இங்கே எழுகிறது.

நீட் தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டாலும், அந்தத் தேர்வு நேரடியாக சுகாதார அமைச்சகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.

சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையம்தான் (NMC) நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், குறைந்தபட்ச தகுதி அளவுகோல்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பான விதிகளைத் தீர்மானிக்கிறது.

அதுமட்டுமின்றி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு, அகில இந்தியக் கோட்டா கலந்தாய்வு மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கும் சுகாதார அமைச்சகமே பொறுப்பாகும்.

இந்தக் காரணங்களால் தான், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஜே.பி.நட்டாவை டிக் செய்திருக்கிறது.

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா
cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

இருமுறை சந்திப்பு

ஜே.பி.நட்டாவின் வீட்டில் தான் போராட்டக்காரர்களுடனான சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு ஒருமுறை அல்ல... இருமுறை நடந்துள்ளது.

முதல் முறை பிரதிநிதிகள் எழுத்துபூர்வ கோரிக்கை கடிதம் இல்லாமல் வந்திருக்கின்றனர். அதனால், எழுத்துப்பூர்வ கடிதத்துடன் இரண்டாவது முறை நட்டாவை சந்தித்தனர்.

அந்தக் கோரிக்கை கடிதத்தில் இடம்பெற்றுள்ளவை குறித்து எந்த உறுதியும் அளிக்காத நட்டா, போராட்டத்தை கைவிடுமாறு மட்டும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த அனைத்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போது, நட்டா அமித் ஷாவிடம் சூழலை அப்டேட் செய்துகொண்டே தான் இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அமித் ஷாவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க